பதிவு செய்த நாள்
19
அக்
2018
03:10
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் இந்த மாதம் சாதகமான இடத்திற்கு வந்து நற்பலன் கொடுப்பார். குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். அதோடு புதன் அக். 23 வரையும், நவ.13க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார். மாத முற்பகுதியிலும், மாதஇறுதியிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு, குருவால் காரிய அனுகூலம் ஏற்படும். ஆடம்பர வசதி மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். முயற்சியில் இருந்த தடைகள் மறையும். சமூகத்தில் மதிப்பு உயரும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு நீடித்தாலும் அக்.27 க்கு பிறகு கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக். 22,23ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் வகையில் நவ.2,3ல் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. எனவே அப்போது அதிகநெருக்கம் வேண்டாம். அக்.27,28ல் சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக். 24 முதல் நவ. 13 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவால் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அக். 28 முதல் நவ.13 வரை வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை. அக்.20,21, நவ.16 ஆகிய நாட்கள் அனுகூலமானதாக அமையும்.
வியாபாரிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பகைவர்களை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதார வளம் சிறக்கும். அக். 24,25,26,29,30 ஆகிய நாட்களில் சந்திரனால் தடை வரலாம். நவ. 6,7,8ல் எதிர்பாராமல் அதிக லாபம் கிடைக்கும். இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு போன்றவை கிடைக்காது. தொழில் விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புண்டு. பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும். அக். 18,19, நவ.14,15 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற நற்பலனை காணலாம். கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்களில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். அக்.24 முதல் நவ.13 வரை விடாமுயற்சியும், அதிக அக்கறையும் காட்ட வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தினரின் மத்தியில் மதிப்பு உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். அக்.23க்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்.31, நவ.1ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.
நவ.9,10ல் சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். நவ.13க்கு பிறகு வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
ஆரோக்கியம் மேம்படும். ஆனால் தாயின் உடல் நலனில் கவனம் தேவை. அக். 27க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் வரலாம். உறவினர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தந்தை வழியில் சொத்து சேரும்.
* நல்ல நாள்: அக்.20,21,22,23,27,28,31, நவ.1,6,7,8,9,10,16
கவன நாள்: நவ.11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 7,9
* நிறம்: மஞ்சள், சிவப்பு
* பரிகாரம்:
● வெள்ளியன்று ராகுகால துர்க்கை வழிபாடு
● சனியன்று சனீஸ்வரருக்கு எண்ணெய் தீபம்
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பாலபிஷேகம்