ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்டு ஏகாதசி விழா வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தையொட்டிய மணல்வெளியில் இணையானையர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.