Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் சந்தன காப்பு ... திருவண்ணாமலை மஹா தீபம் அணைந்ததாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீங்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீங்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில்

பதிவு செய்த நாள்

01 டிச
2018
12:12

பெரியகுளம்: பெரியகுளம் வராக நதி கரையோரம் ஞானம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயில் 800 ஆண்டு தொன்மை வாய்ந்தது. திருப்பதி அருகே காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இந்தகோயில் உருவானது. ஏழுமலையான் அருகே காளஹஸ் தீஸ்வரர் அமைந்தது போல், இங்கும் வரதராஜப்பெருமாள் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.மூலவர்களாக காளஹஸ்தீஸ்வரரும், ஞானம்பிகையும், பரிவார தெய்வங்களாக ராஜகணபதி, கார்த்திகேயன், விஷ்ணுகணபதி, துர்கா, லட்சுமி,
சரஸ்வதி, வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியன், நடராஜர் உள்ளிட்டோர் உள்ளனர். நவக்கிரஹம், சூரியன், சந்திரன், நந்தீஸ்வரர்கள் மற்றும் ராகு, கேதுவிற்கு தனி சன்னதி உள்ளது.

கன்னிமூல கணபதிக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இக்கோயிலை நாடி வரும் பக்தர்களுக்கு தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

குழந்தைபேறு உட்பட சகலஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை., வேண்டியவருக்கு வேண்டும் வரம் தரும் வள்ளலாக காளஹஸ்தீஸ்வரர் திகழ்கிறார். தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி மற்றும் மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை நடைதிறந்திருக்கும். இரு
வேளை பூஜை நடந்து வருகிறது. பிரதோஷ சிறப்பு வழிபாடும், தேய்பிறை அஷ்டமியன்று சேத்ரபாலபைரவருக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கிறது.

சதுர்த்தி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாகளில் சிறப்பு பூஜைகள், ராகு, கேதுவுக்கு நாகதோஷம், செவ்வாய் தோஷம் பரிகார பூஜை நடக்கிறது.

அர்ச்சகர் கணேசன் கூறுகையில், "இக்கோயிலிக்கு வரும் பக்தர்களுக்கு மனம், உடல், மேன்மை பட்டு, சகல சம்பத்துகளும் கிடைத்து வருகிறது. காளஹஸ்தீஸ்வரர், அவர்களின் கண்களுக்கும், மனதிற்கும் பேசும்தெய்வமாக அருள்பாலிக்கிறார். பக்தர்களுக்கு நிறைகளை அள்ளித்தருவதே அவரின் மகிமை, என்றனர்.விபரங்களுக்கு: 99407 85335

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar