ஆழ்வார்களின் பாடல்களை, அபிநயத்துடன் பாடி ஆடுவது அரையர் சேவை.இதற்கென்று அலங்காரமோ, உடையோ எதுவும் செய்வதில்லை. கூம்பு வடிவ குல்லாவை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக் களைந்த மாலை, பரிவட்டம் அணிந்து கொள்வர். பாசுரங்களைப் பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவத்தைக் காட்டி அரையர் நடிப்பார்கள். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் நிகழ்ச்சிக்காக அரையர் பட்டு உடுத்துவார். முத்துக்குறி என்பது குறிசொல்பவளிடம் மகளின் எதிர்காலம் பற்றி தாய் கேட்கும் நிகழ்வாகும். இதைக் காண வருபவர்கள் பட்டுடுத்தி வருவர். அன்று அரையர் ஒருவரே தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி, மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவர்.