Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மசாஸ்தா – புஷ்கலாதேவி ... கொடைக்கானலில் சபரிமலையை காக்க தீபம் ஏற்றி வழிபாடு கொடைக்கானலில் சபரிமலையை காக்க தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவிலில் சபரிமலை புனிதம் காக்கக்கோரி தீபம் ஏந்தி சரண கோஷம்
எழுத்தின் அளவு:
நாகர்கோவிலில் சபரிமலை புனிதம் காக்கக்கோரி தீபம் ஏந்தி சரண கோஷம்

பதிவு செய்த நாள்

27 டிச
2018
12:12

நாகர்கோவில்: சபரிமலையில் புனிதத்தை பாதுகாக்க கோரி, கேரள மாநிலம், காசர்கோட்டில் இருந்து, கன்னியாகுமரி வரை, கையில் தீபம் ஏந்தி, அய்யப்ப ஜோதி சரண கோஷம் நிகழ்ச்சி, நேற்று (டிசம்., 26ல்) மாலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்வதற்கான அனுமதியை எதிர்த்து, அய்யப்ப பக்தர்கள், மற்றும் ஹிந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சபரிமலையின் புனிதத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, அய்யப்ப தர்ம சேனா சார்பில், நேற்று (டிசம்., 26ல்)மாலை கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து, கன்னியாகுமரி வரை முக்கிய சந்திப்பு, மக்கள் கூடும் இடங்கள், தேசிய நெடுஞ்சாலையோரங்களில், அய்யப்ப ஜோதி சரணகோஷம் என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில் கையில் தீபத்தை ஏந்தியவாறு நின்ற அய்யப்ப பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் சரண கோஷம் எழுப்பினர்.

குமரி மாவட்டத்தில் ஹிந்து கோவில் கூட்டமைப்பினர், அய்யப்ப தர்ம சேனாவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காசர்கோட்டில் துவங்கிய அய்யப்ப ஜோதி சரண கோஷம், குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் வழித்தடத்தில் பல இடங்களில் நடந்தது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் முன் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar