காஷ்யப முனிவர், அதிதி தம்பதியின் மகன் சூரியன். சூரியனுக்கு உஷா, சாயா, சமுங்கை, பிரபை என்பவர்கள் மனைவியர். இவர்களில் உஷாவுக்கு வைவஸ்தமனு, எமதர்மராஜன் என்னும் மகன்களும், யமுனை என்னும் மகளும் பிறந்தனர். உஷாவுக்கு சூரியனின் வெப்பத்தை தாங்கும் சக்தி இல்லாததால் தன்னைப் போல ஒரு பிம்பம் செய்து உயிரூட்டி ’சாயா’ எனப் பெயரிட்டாள். அவளை சூரியனின் மனைவியாக்கினாள். இவளுக்கு கிருதத்வாசி, சனி என்ற மகன்களும் பத்தரை என்ற மகளும் பிறந்தனர்.