சிவனை அபிஷேகப் பிரியர் என்பர். ருத்ரம், சமகம் என்ற மந்திரங்களை ஜெபித்து, பசுவின் கொம்பு வழியாக சிவனுக்கு பாலபிஷேகம் செய்வது புனிதமானதாகும். பால் மட்டுமில்லாமல் பஞ்ச கவ்யம் என்னும் பால், தயிர், நெய், கோமியம்(பசு மூத்திரம்), கோமயம்(சாணம்) ஆகிய ஐந்தையும் கொம்பு மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதைப் பார்த்தால் பாவம் தொலையும்.