Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் நரசிம்மர் கோவிலில் 30ல் ... சிவன் கோயிலில் விருட்ஷ சாஸ்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு திடீர், பல்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2019
01:01

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட, 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, ஏற்கனவே தெரிவித்த தகவல் தவறானது; 17 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்தனர் என கூறி, கேரள மாநில, இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு,  வேறு ஒரு பட்டியலை வெளியிட்டு உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை, அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு,  ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தின. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து, 40, கனகதுர்கா, 34, என்ற இரண்டு பெண்கள், பம்பையிலிருந்து, சபரிமலைக்கு, போலீசார்உதவியுடன் சென்று, தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு, பல்வேறு தரப்பில்  இருந்தும் மிரட்டல்கள் வந்ததை அடுத்து, பாதுகாப்பு கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் விசாரணையின் போது, சமீபத்தில் முடிந்த, மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில், 10 - 50 வயதுடைய, 51 பெண்கள், தரிசனம் செய்துள்ளதாக,  கேரள அரசு பட்டியல் தாக்கல் செய்தது. இந்த பட்டியல் தவறானது என்றும், அதில், பல குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து,பட்டியலில் திருத்தம் செய்ய, கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக, கேரள தலைமைச் செயலர், டாம் ஜோஸ்  தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, புதிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பட்டியல்: அதன் விபரம்: முதலில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த, 30க்கும் அதிகமான பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும், நான்கு பேர் ஆண்கள்; இவர்களது பெயர்கள், தவறுதலாக பட்டியலில் சேர்க்கப்பட்டன. எனவே, பழைய பட்டியலில் இருந்து, 34  பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. இதன்படி, இந்த மண்டல காலத்தில், சபரிமலை கோவிலில், 10 - 50 வயது வரையிலான, 17 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar