திருப்பதி திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாளுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஆன்மீக மனம் மகிழ அவர்கள் பெருவாரியாக இருக்கும் இடத்திலேயே பெருமாள் கோவிலை நிர்வாகம் கட்டிவருகிறது. அதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரியில் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று (ஜன.,27) ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள்ளாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.