Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூரில் தீயின் ஒளியில் பாபா ... ஓமலூர் காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகுடஞ்சாவடி சித்தர்கோவிலில் வற்றிய தீர்த்தக்குளம் 6 அடி ஆழப்படுத்தும் பணி ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
01:02

மகுடஞ்சாவடி: சேலத்திலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், கஞ்சமலை, காளாங்கி சித்தர்கோவில் உள்ளது. அங்கு, கருவறை பின்புறமுள்ள, வற்றாத தீர்த்தக்குளத்திலிருந்து, சுற்றுவட்டார கோவில்களில் நடக்கும், கும்பாபிஷேக விழாவுக்கு, பக்தர்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்துச்செல்வர்.

இக்குளத்தில், தினமும் அர்ச்சகர் நீராடியபின், அதிலுள்ள நீரை, குடத்தில் எடுத்து வந்து, மூலவருக்கு அபிஷேகம் செய்வர். பிரதி அமாவாசையில், நூற்றுக் கணக்கான பக்தர்கள், தங்கள் உடலில் உள்ள மரு, தோல் வியாதிகள் குணமாக, உப்பு, மிளகை, தங்கள் தலையை சுற்றி, குளத்தில் வீசிச்செல்வர். இந்நிலையில், குளத்தின் உட்பகுதியில், கிழக்கு புறமாக வந்துகொண்டிருந்த ஊற்றுநீர், கடந்தாண்டு நின்றதால், குளம் வறண்டது. இதனால், 500 மீ., தொலைவிலுள்ள முருகன் கோவிலிலிருந்து, ஆழ்துளை கிணறு மூலம், குளத்துக்கு நீரை நிரப்பி, அதை அபிஷேகத்துக்கு பயன்படுத்தினர். நேற்று (ஜன., 31ல்), குளத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.

இதுகுறித்து, பரம்பரை குருக்கள் சிவமணி கூறியதாவது: என் தாத்தா காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் கூட, இந்த, 15 அடி ஆழமுள்ள குளம் வற்றவில்லை.  தற்போது வறண்டது கவலையளிக்கிறது. இதனால், மூலவர் காளாங்கி சித்தர் சுவாமியிடம், ஆழ்துளை கிணறு அமைக்கலாமா, குளத்தை ஆழப்படுத்தலாமா என, பூ வாக்கு கேட்டோம். அதில், ஆழப்படுத் தினால் தண்ணீர் கிடைக்கும் என உத்தரவு கிடைத்தது.

இதனால், பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பங்களிப்புடன், குளத்தை, 6 அடி வரை ஆழப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் பணி முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar