பதிவு செய்த நாள்
12
பிப்
2019
12:02
சிந்தனையால் உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!
சுக்கிரன் பிப்.25 வரை நன்மை தருவார். அவரால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். இப்போது ராகு ராசிக்கு 11ம் இடமான மிதுன ராசியில் இருப்பது சிறப்பான இடம். அவரால் இதுவரை இருந்த பிரச்னை மறையும். பொருளாதார வளம் சிறக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது இப்போது 5ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் அரசு வகையில் பிரச்னை தரலாம். திருட்டு பயம் ஏற்படலாம். எதிரிதொல்லை ஏற்படலாம்.
குருபகவான் மார்ச்13ல் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்குச் செல்கிறார். இது சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர் வகையில் வீண்பகை மறையும். அவரது 5,7ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் நன்மை அதிகரிக்கும்.
குடும்பத்தில் ராகுவால் பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். இருப்பினும் புதனால் குடும்பத்தில் குழப்பம், மனவேதனை, மனைவியால் தொல்லை வரலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். பிப்.19,20,21ல் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.15,16ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் பிப்.26,27ல் உறவினர் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மார்ச்13க்கு பிறகு நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பிப்.13,14,மார்ச் 12,13,14 நன்மை தரும் நாட்களாக அமையும்.
தொழில், வியாபாரத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் அதிக லாபத்தை தரும்.
பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். எதிரிகளால் தொல்லை வரலாம். ஆனால் எளிதில் முறியடிப்பீர்கள். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பிப்.25க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். மார்ச்3,4ல் மகிழ்ச்சியான அனுபவம் ஏற்படும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள் உற்சாகமான பலனைக் காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். பிப்.25க்கு பிறகு சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் சுமாரான நிலையில் படிப்பர். அதே நேரம் குருவருளால் மார்ச் 13க்கு பிறகு நல்லபலன் காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கிழங்கு வகைகள், நிலக்கடலை, கரும்பு, எள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் வருமானம் சுமாராக இருக்கும்.
பெண்களால் குடும்பம் சிறப்படையும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். மார்ச் 5,6,7ல் காரிய அனுகூலம் ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப். 24,25ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். மார்ச்13க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.
* நல்ல நாள்: பிப்.13,14,15,16,19,20,21,24,25, மார்ச் 3,4,5,6,7,12,13,14
* கவன நாள்: மார்ச் 8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6
* நிறம்: வெள்ளை, நீலம்
* பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
* சதுர்த்தியன்று விநாயகருக்கு நெய்தீபம்