பதிவு செய்த நாள்
14
பிப்
2019
01:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களின் உண்டியல் 1.08 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள், கோயில் நிர்வாகத்தில் உள்ள உபகோயிலான நம்புநாயகி அம்மன், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் சேகரிக்கப்பட்டது.
பின் காணிக்கையை கடந்த இரு நாட்களாக, கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பாலசுப்பிரமணி, பஷே்கார்கள் கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், கோயில் ஊழியர்கள், பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள் எண்ணினர். இதில் ரொக்க பணம் 1 கோடியே 8 லட்சத்து 95 ஆயிரத்து 467 ரூபாயும், தங்கம் 170 கிராம், வெள்ளி 3 கிலோ 538 கிராம் காணிக்கையாக கிடைத்தது. பக்தர்கள் செலுத்திய இக்காணிக்கையை அரசு வங்கியில் கோயில் அதிகாரி டெபாசிட் செய்தார்.