Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிருதாப நாசினி திருக்குளத்தில் ... தஞ்சையில் ராமராஜ்ஜிய ரதயாத்திரை தஞ்சையில் ராமராஜ்ஜிய ரதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 மார்
2019
01:03

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று வெள்ளித்தேரோட்டம் துவங்கியது; தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

தொடர்ந்து, கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. கடந்த மாதம், 19ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, பக்தர்கள் தினமும் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.தொடர்ந்து, கடந்த, 1ம் தேதி பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து வழிபாடு துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து, அம்மனை வழிபட்டனர். நேற்று காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று மாலை, 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.இரவு, 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அம்மா தாயே; காவல் தெய்வமே, என, பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். புஷ்ப அலங்காரத்தில், நீல நிற பட்டு உடுத்தி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கோவில் வளாகத்தில் துவங்கிய தேரோட்டம், மார்க்கெட் ரோடு வழியாக வந்து, வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்டது.இன்று, இரண்டாம் நாள் தேரோட்டத்தில், சத்திரம் வீதியில் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை மூன்றாம் நாள் தேரோட்டத்தில் கோவில் வளாத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.பல்லடத்தை அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar