Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் ... அனுப்பர்பாளையம் கொங்கணகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் கோவில் கல்வெட்டு உணர்த்தும் உண்மை
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் கோவில் கல்வெட்டு உணர்த்தும் உண்மை

பதிவு செய்த நாள்

08 ஏப்
2019
01:04

மக்களாட்சி தேர்தல் முறையில், உலகின் முன்னோடியாக, பழங்கால தமிழகம் விளங்கியதை, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டு விளக்குகிறது. இந்த காலத்தில், தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம், பல்வேறு விதிமுறைகளை அறிவித்து, கெடுபிடியுடன் பின்பற்ற அறிவுறுத்துகிறது. எனினும், அதையும் மீறி, பலம் பொருந்திய அரசியல் கட்சிகள், பலவிதமான முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. ஆனால், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை போற்றும் வகையில், தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் பராந்தக சோழ மன்னன், கி.பி., 10ம் நுாற்றாண்டில், இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளார். அக்காலத்தில், உத்திரமேரூர், சதுர்வேதி மங்கலம் என, குடும்புகள் எனப்படும், 30 சிறுபகுதிகளுடன் விளங்கியுள்ளது. பொருள், பொன், ஏரி, தோட்டம் போன்ற நிர்வாகத்திற்கு, தனித்தனி வாரியங்களுடன், குடும்புகள் செயல்பட்டுள்ளன. அவற்றை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, மக்களாட்சி தேர்தல், கி.பி., 919ல், முதலில் நடத்தப்பட்டுள்ளது.தகுதியான நபர்களின் பெயரை, பனையோலையில், எழுத்தாணியால் எழுதி, அவற்றை குடத்தில் இட்டு, விபரமறியா சிறுவன் மூலம், ஒரு ஓலையை எடுக்கச் செய்துள்ளனர்.அந்த ஓலையில் இருக்கும் பெயரை உடையவர், மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் முறை, குடவோலை தேர்தல் என சிறப்பு பெற்றது.

குடத்தில் ஓலைகளில் பெயர் எழுதி போட்டு, அதன்படி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், குடவோலை முறை என, அழைக்கப்பட்டது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், ஓராண்டு. போட்டியிடும் முன், மூன்றாண்டுகள் பதவி வகித்திருக்க கூடாது. பதவிக்கு பிறகும், மூன்றாண்டுகள் போட்டியிடவும் தடை இருந்துள்ளது. பதவியின் போது, தவறிழைத்தால், பதவி பறிக்கப்படும் என, கடுமையான நிபந்தனைகளின் படியே, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் தகுதிகள்: கால் வேலி, சொந்த நிலத்திற்குரியவர்; சொந்த மனை, வீடு வைத்திருப்பவர்; வயது, 35 - 70 வரை உள்ளவர்; வேதங்களில் புலமை பெற்றவர் போட்டியிட்டுள்ளனர்.

போட்டியிட தகுதியற்றோர்: பதவி வகித்த பிறகு, நிர்வாக கணக்கு அறிவிக்காதவர் மட்டுமின்றி, அவரின் உறவினர்களும் போட்டியிட தகுதியற்றவர்கள்; பிறர் மனைவியை புணர்ந்தவன்; மகா பாவங்களான, கொலை, திருட்டு புரிந்தவன்; பொய் உரைத்தவன்; கள் அருந்தியவன்; உண்ணக்கூடாததை உண்டவன்.

இதுகுறித்து பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், வைகுண்ட பெருமாள் கோவிலில், தற்போதும் உள்ளன. இப்போதிலிருந்து, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, கடும் நிபந்தனைகள் விதித்து, நேர்மையாளர்களை தேர்ந்தெடுத்து, மக்களாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளனர், நம் முன்னோர்.இந்த நாட்டில் தான், தேர்தலில் பணப்புழக்கம், வசைபாடல், கள்ள ஓட்டு, பொய் வாக்குறுதி என, முறைகேடுகள் நடக்கின்றன; நம்மை தலைகுனிய செய்கின்றன. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar