Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பு இல்லாமல் சிதைந்து வரும் ... கிள்ளை திரவுபதியம்மன் கோவிலில் தேரோட்டம் கிள்ளை திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா: ஏப்.,17ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா: ஏப்.,17ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
11:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு 62 அடி உயர தங்கக்கொடிமரத்தில் நேற்று காலை 10:05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதைமுன்னிட்டு காலை 9:15 மணிக்கு விநாயகர், முருகன், தண்டீஸ்வரர், காலை 9:30 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமி, பச்சைப்பட்டு உடுத்தி, கையில் தங்கக்கிளியுடன் அம்மன் தங்கக்கொடிமரம் முன் எழுந்தருளினார்.

ஸ்தானிக பட்டர் முன்னிலையில் காப்புக்கட்டிய சுவாமிநாதன் பட்டர் தங்கக்கொடிமரத்துக்கு பூஜை நடத்தினார். ஓதுவார்கள் தேவாரம், திருப்புகழ் பாடினர். காலை 10:05 மணிக்கு கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. தங்கக் கொடிமரத்துக்கு புனித நீரூற்றப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தீபாராதனைகள் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர். போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்து கொண்டார்.

தக்கார் கூறியதாவது: ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.,16  திக்குவிஜயம், ஏப்.,17 திருக்கல்யாணம், ஏப்.,18 தேரோட்டம் நடக்கிறது. திருக்கல்யாண மணமேடை பகுதிகளில் 200 டன் ‘ஏ.சி’ வசதி செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பூக்கள் மற்றும் வெட்டிவேர்களால் மேடை அலங்கரிக்கப்படும். சித்திரை வீதிகளில் மேற்கூரை அமைக்கப்படும். திருக்கல்யாணத்தை காண 20 இடங்களில் அகண்ட எல்.சி.டி., திரைகள்  வைக்கப்படும்.


திருவிழாவிற்காக உபயதாரர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கோயில் சார்பில் திருக்கல்யாண விருந்து, பிரசாதம் வழங்கப்படும். கட்டண டிக்கெட் 6,400 பேர்,  உபயதாரர்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. 3,500 பேருக்கு கட்டணமில்லா தரிசனம் செய்ய முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாகவும், 200 ரூபாய், 500 ரூபாய் கட்டண தரிசனம் செய்வோர் வடக்கு கோபுரம் வழியாகவும்,  வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். கோயில் கடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவை செயல்படுத்துவோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar