Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேடு கோயில்களில் கனி மாற்றும் ... கடல் உள்வாங்கியது: நவபாஷாணம் வரும் பக்தர்கள் அவதி கடல் உள்வாங்கியது: நவபாஷாணம் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதர் தெப்பக்குளம்: பக்தர்கள் ஆவல்
எழுத்தின் அளவு:
பாலமலை ரங்கநாதர் தெப்பக்குளம்: பக்தர்கள் ஆவல்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
12:06

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் தெப்பக்குளத்தை பொலிவுபடுத்த வேண்டும் என, பெருமாள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், இக்கோவில் உள்ளது.

ஸ்ரீ ராமானுஜர் வருகை புரிந்த திருத்தலம் என்ற சிறப்பு பெற்ற பாலமலை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி, மார்கழி, சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.பழம் பெருமை மிக்க இக்கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் கிழக்கு பக்கமாக தெப்பக்குளம் உள்ளது. ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி தேர் திருவிழாவின் போதும், தெப்போற்சவம் நடக்கும். அப்போது, அருள்மிகுரங்கநாத பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் தெப்போற்சவம் நடக்கும் போது, மிகப்பெரும் விழாவாக கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், தற்போது தெப்போற்சவம் சிறிய விழாவாக கொண்டாடப்படுகிறது.இது குறித்து, பெருமாள் பக்தர்கள் கூறுகையில்,பழம் பெருமை மிக்க இத்தெப்பக்குளம் போதுமான பராமரிப்பு இன்றி உள்ளது.

பருவமழைக்காலத்தில் பெய்யும் மழை நீர், தெப்பக்குளத்தில் தேங்கும். திருவிழாவின் போது, பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மண்டபத்தில் தங்கி, இளைபாறுவர். ஆனால், தற்போது பராமரிப்பு இல்லாததால், தெப்பக்குளம் பகுதி காதலர்கள் சந்திக்கும் பகுதியாக மாறி விட்டது. தெப்பக்குளத்தை புனரமைத்து, மழைநீர் இதில் சேகரிக்க தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.இப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி விவசாயிகள், தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்தால் நீர் தேங்கும். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயமும் செழிக்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar