Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்தி வரதரை தரிசிக்க வரும் ... கோயில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள் கோயில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவிலில் ராஜராஜ சோழன் அமைத்த மழைநீர் சேகரிப்பு
எழுத்தின் அளவு:
பெரியகோவிலில் ராஜராஜ சோழன் அமைத்த மழைநீர் சேகரிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2019
12:07

தஞ்சாவூர்: பல நுாற்றாண்டுகளுக்கு முன்பாகவே, சோழ மன்னர்கள் காலத்தில், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மழை நீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். தஞ்சையை தலைநகராக வைத்து, ஆட்சி செய்த ராஜராஜ சோழன், மழை நீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக, பெரிய கோவில் அருகே, சிவகங்கை என்ற குளத்தை அமைத்து, கோவிலில் விழும் மழை நீரை சேமித்துள்ளார்.சோழர்களுக்கு பின், ஆட்சிக்கு வந்த சரபோஜி மன்னரும், இதே தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளார் என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, வரலாற்று ஆய்வாளர், மணிமாறன் கூறியதாவது:ராஜராஜ சோழன், தன் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை வளப்படுத்த, குளம், ஏரிகளை அமைத்தார். குடிநீர் தேவைக்காக, பெரியகோவில் அருகே, சிவகங்கை குளத்தை வெட்டி, மழை காலங்களில், குளத்திற்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்துள்ளார். பெரிய கோவிலின் வடக்கு புறத்தில், மழை நீர் செல்லும் வகையில், சாளரம் என்ற இரண்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தி, இரண்டிலும் தண்ணீரை தடுத்து, குளத்துக்கு அனுப்பும் முறையையும் செய்துள்ளார். சிவகங்கை குளம் நிரம்பிய பின், அய்யன்குளம், சாமந்தான் குளங்களும் தண்ணீர் செல்லும் படி வாய்கால்கள் அமைக்கப்பட்டு, மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் கட்டிய அனைத்து கோவில்களிலும், மழைநீர் சேகரிக்கும் சாளரம் இருந்துள்ளது. தொடர்ந்து, தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், ஜல சூத்திரம் என்ற அமைப்பை உருவாக்கி, கோட்டையில் உள்ள கிணறுகள், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் செல்லும் கட்டமைப்பை வடிவமைத்தார். ஆங்கிலேயர் காலத்தில் கூட, இவை பாரமரிக்கப்பட்டு வந்துள்ளன. கடந்த, 50 ஆண்டுகளில் தான், அவை வீணாகி விட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்த ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்ததை ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற உள்ள பௌர்ணமி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar