Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் நளன் குளம் சுத்தம் ... இடியும் நிலையில் ’வில்லுண்டி தீர்த்தம்’ இடியும் நிலையில் ’வில்லுண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவிலில் ஆபரணங்கள் மாயமா?
எழுத்தின் அளவு:
திருப்பதி கோவிலில் ஆபரணங்கள் மாயமா?

பதிவு செய்த நாள்

28 ஆக
2019
11:08

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, 5.4 கிலோ எடையுள்ள ஆபரணங்கள் மாயமானதாகவும், இதற்காக, கருவூலத்தின் உதவி நிர்வாக அதி காரி, சீனிவாசலு சம்பளத்திலிருந்து மாதம், 25 ஆயிரம் ரூபாயை பிடித்தம் செய்து, இழப்பை சரி செய்வதாகவும், பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், காணாமல் போனதாக கூறப்பட்ட நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி பத்திரிகையாளர் சங்கத்தில்,பா.ஜ., செய்தி தொடர் பாளர் பிரகாஷ் ரெட்டி கூறியதாவது:திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில், பாது காப்பாக வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களில், ஒரு வெள்ளி கிரீடம், இரண்டு தங்க மோதி ரங்கள், இரண்டு தங்க நெக்லஸ்கள் காணாமல் போய்விட்டன. இவற்றின் மொத்த எடை, 5.4 கிலோ.கடந்த நவம்பரில், கருவூலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, ஆபரணங்கள் மாய மானது தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.உண்மையை வெளியில் சொல்ல தயங்கிய தேவஸ்தான அதிகாரிகள், காணாமல்போன ஆபரணங்களின் மதிப்பு, 7.36 லட்சம் ரூபாய் என, மதிப்பீடு செய்தனர்.

அந்த தொகைக்காக, கருவூலத்தின் உதவி நிர்வாக அதிகாரி, சீனிவாசலு ஊதியத்திலிருந்து, மாதம், 25 ஆயிரம் ரூபாயை, ரகசியமாக பிடித்தம் செய்கின்றனர்.இதுதவிர, 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வேறு ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதும் தெரியவந்துள்ளது.எனவே, பக்தர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில், ஆபரண இருப்பு பற்றி வெள்ளை அறிக்கை ஒன்றை, தேவஸ்தானம் வெளியிடவேண்டும். தவறினால், போராட்டம் நடத்தி, உண்மையை வெளியில் கொண்டு வருவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில், காணாமல் போனதாக கூறிய ஆபரணங்கள் கண்டுபிடிக் கப்பட்டதாக, தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar