குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள திப்பிறமலையில் கருமாணித் தாழ்வார் கிருஷ்ணன் கோயில் உள்ளது. கருவில் இருக்கும்போதே தாய் தந்தையரான தேவகி வசுதேவருக்கு கிருஷ்ண பரமாத்மா விஸ்வரூப காட்சி அளித்தார். அதைக் குறிப்பது போல் இங்குள்ள கிருஷ்ணர் சிலை 13 அடி உயரம் கொண்டுள்ளது. தற்போதுள்ள கோயில் மூன்றாவது தடவையாக பிரித்துக்கட்டப் பட்டதாகவும், ஆதியில் இச்சிலை தானாக வளர்ந்ததாகவும், இந்த சிலையின் வளர்ச்சியை கோயில் பூசாரி தடுத்து நிறுத்தியதாகவும் தலவரலாறு கூறுகிறது.