Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார ... குன்றக்குடியில் சூரசம்ஹாரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷத்தில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மருதமலையில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷத்தில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 நவ
2019
01:11

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த அக்., 28ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், கந்த சஷ்டி விழா  துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.

விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 16 வகையான திரவங்கள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு,  சுப்பிரமணியசுவாமி தங்க கவசத்துடன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று பகல், தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில், வீரபாகு குதிரை வாகனத்தில் வந்து  தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் துாது சென்றார். அதன்பின், பகல், 3.15 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரத்திற்காக, அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது, சூரபத்மன், மா மரமாக உருமாறி நின்றார்.  சுப்பிரமணியசுவாமி, தானே நேரில் வந்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து பானுகோபன், சிங்கமுகாசுரன் வதம், கஜமுகாசுரன் வதங்கள் நடந்தன.


பின், சுப்பிரமணிய சுவாமிக்கு, வெற்றி வாகை மாலை சூடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய  சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம், பூஜை தீபாராதனை நடந்தது. மருதமலையில்சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அரோகரா கோஷங்களை எழுப்பினர்.கந்தசஷ்டி விழாவின் இறுதிநாளான இன்று காலை, 9:00  முதல் 10:30 மணிக்குள், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை திருமணம் செய்யும் நிகழ்ச்சியான, திருக்கல்யான உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar