பதிவு செய்த நாள்
13
ஜன
2020
05:01
கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், செவ்வாய் பிப்.7க்கு பிறகும் நன்மை கொடுப்பர். சுக்கிரன் பிப்.4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். மேலும் சனி, கேதுவால் நன்மைகள் தொடரும். வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஜன.22க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பிப்.9க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கைகூடும்.
பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை சேரும். சகோதரிகள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். பிப்.4க்கு பிறகு பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வில் குதூகலம் உண்டாகும். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். பயணத்தின் போது கவனம் தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். பிப்.4க்கு பிறகு உடல்நலம் மேம்படும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் விருத்தி அடையும்.
* வியாபாரிகளுக்கு இருந்த பணவிரயம், முயற்சியில் தடைகள் முதலியன ஜன.22க்கு பிறகு மறையும்.
* தரகு, கமிஷன் தொழிலில் தடைகள் மறையும். கடந்தகால பிரச்னைகள் இனி இருக்காது.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கமாக வர வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.22க்கு பிறகு சிறப்பான பலன் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
* ஐ.டி.,துறையினர் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* வக்கீல்கள் சனிபகவானால் பகைவரின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர். ஆற்றல் மேம்படும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பிப்.9க்கு பிறகு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் நற்பலனை எதிர்நோக்கலாம். புகழ், கவுரவம் மேலோங்கும். தேர்தலில் வெற்றி கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னைகள் மறையும். பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். பொருளாதார வளம் கூடும்.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்து காண்பர்.
* விவசாயிகள் பாசிப்பயறு, எள், கொள்ளு, துவரை, தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் காண்பர். பிப்.9க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். ஜன.22க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும்.
* பள்ளி மாணவர்கள் ஜன.22க்கு பிறகு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் வெளியூர் பயணத்தால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகலாம். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.
* வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாடிக்கையாளர்கள் கருத்து மதிப்பளிக்கவும்.
* அரசு பணியாளர்கள் பணியிடத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
* மருத்துவர்கள் பணிச்சுமையால் சிரமப்பட நேரிடலாம். ஆடம்பரச் செலவை குறைத்து சிக்கனமாக இருக்கவும்.
* ஆசிரியர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பு அதிகமானாலும் வருமானம் குறையாது. வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும்.
* கல்லூரி மாணவர்கள் சிலருக்கு மனக்குழப்பம் ஏற்படலாம் கவனம். விடாமுயற்சியுடன் படிக்கவும்.
பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்தீபம்
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு
* நல்ல நாள்: ஜன.22,23,24,25,26, பிப்.1,2,3,4,5,8,9,12
* கவன நாள்: ஜன. 27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: மஞ்சள், சிவப்பு