Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: பதவி உயர்வு மிதுனம்: பெண்களால் நன்மை மிதுனம்: பெண்களால் நன்மை
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

11 ஏப்
2020
01:04

திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
ராசிக்கு 9ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் மே 3ல் உங்கள் ராசியில் இருந்து 2ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். இதனால் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதன் ஏப்.18 வரை 11ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

குருவால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். மே4க்கு பிறகு வீட்டில் சிறுசிறு பிரச்னை வரலாம். அண்டை வீட்டாருடன் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு.  சிலரது வீட்டில் பொருள் திருட்டு ஏற்படலாம் கவனம்.


பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவர். தோழிகள் உதவிகரமாக இருப்பர். மே4 க்கு பிறகு கணவன், மனைவி இடையே பிரச்னை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சனி, ராகுவால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரியும் நிலை ஏற்படலாம்.

உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. மே 3க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.


சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களைப் பொறுத்தவரை,  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். ஏப்.18 வரை புதனால் தொழிலில் லாபம் உயரும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.
* வியாபாரிகள் குருவால் அமோக லாபம் காண்பர். எதிரிகளின் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். மே3 க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* அரசு பணியாளர்கள் மே 3க்கு பிறகு சிறப்பான பலனைப் பெறுவர். வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* தனியார்துறை பணியாளர்கள் மாத முற்பகுதியில் சிறப்பான பலனைக் காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மே 3க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு ஏப்.18 வரை வழக்குகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் குருவின் சாதகத்தால் நற்பலன் கிடைக்கப் பெறுவர். கோரிக்கைகள் நிறைவேறும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது.
* பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப்பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* கலைஞர்கள் முன்னேற்றமான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மே 3க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். பாசிப்பயறு, மஞ்சள், பழவகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானத்தைக் காணலாம். கால்நடை வகையில் ஆதாயம் அதிகரிக்கும்.  
* பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையால் கல்வியில் சிறப்படைவர். ஆனால் ஏப்.18 முதல் அக்கறையுடன் படிப்பது நல்லது.

* கல்லுாரி மாணவர்களுக்கு குருவால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.  ஏப்.18க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.


சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஏப்.18க்கு பிறகு விரயம் ஏற்படலாம். தொழிலில் நஷ்டம் உருவாகலாம்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஏப்.18க்கு பிறகு வீண் செலவுகள் உருவாகலாம். சிக்கனம் தேவை.
* அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
* ஐ.டி.,துறையினர் தற்காலிகமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.  
* மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள் சற்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
* வக்கீல்களுக்கு ஏப்.18க்கு பிறகு எதிரியால் தொல்லை ஏற்படலாம்.
* போலீஸ், ராணுவத்தினர் நிதானமுடன் செயல்படுவது நல்லது. வேலைப்பளு இருக்கும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
* அரசியல்வாதிகளுக்கு  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கப் போகலாம். சிலர் மனக்குழப்பத்திற்கு ஆளாவர்.

* விவசாயிகள் புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்


நல்ல நாள் ஏப்.18,19,20,21,22,25,26,30,31 மே 6,7,8,9
கவன நாள் ஏப்.14 மே10,11,12 சந்திராஷ்டமம்  
எண்: 3,9 .நிறம்: வெள்ளை, மஞ்சள்  


பரிகாரம்

* செவ்வாயன்று முருகன் வழிபாடு
* சனியன்று பெருமாளுக்கு நெய்தீபம்
* பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம்

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar