பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
நட்புக்கு முன்னுரிமை தரும் ரிஷப ராசி அன்பர்களே!
சுக்கிரன் ஆக.31 வரை 2ம் இடத்தில் இருப்பதால் சமூக மதிப்பு அதிகரிக்கும். கணவர், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். புதன் ஆக.29 வரை 4ம் இடத்தில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் அதன் பிறகு சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். அப்போது அவரால் அலைச்சல் அதிகரிக்கும்.
ராகு செப்.1ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலையே. இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் அவரால் இதுவரை இருந்த பிரச்னை, திருட்டு சம்பவம் முதலியன மறையும். கேது செப்.1ல் 7-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இதுவும் உகந்த இடம் என சொல்ல முடியாது. அவர் மனைவி வகையில் பிரச்னையை தரலாம். அலைச்சல் ஏற்படும். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரி தொல்லை ஏற்படலாம். உடல்நிலை சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் புதன், சுக்கிரனால் மகிழ்ச்சி இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். செல்வாக்கு அதிகரிக்கும். செப்.1க்கு பிறகு உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். வெளியூர் வாசம் இருக்கும்.
பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும் செப்.1 க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். சூரியனால் உடல் நலம் பாதிக்கப்படும். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் புதனால் முன்னேற்ற பாதையில் செல்வர். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
* வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நற்பலனைக் காணலாம். பதவி உயர்வு காண்பர். வேலைப்பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகளை ஆக.29க்குள் கேட்டு பெறலாம்.
* ஐ.டி., துறையினர் உன்னதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
* மருத்துவர்கள் பணியிடத்தில் நன்மதிப்புடன் திகழ்வர். சிலர் முக்கிய பொறுப்பு கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
* வக்கீல்கள் ஆக.29வரை வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவைக் காண்பர்.
* ஆசிரியர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். மஞ்சள், காய்கறிகள், கீரை வகையில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை காண முடியும்.
* மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கப் பெறுவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பெண்கள் வகையில் தொல்லைகள், இடர்பாடுகள் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.1க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
* வியாபாரிகளுக்கு புதிய சொத்து வாங்கும் வண்ணம் நிறைவேற சில மாதம் காத்திருக்க நேரிடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் முயற்சிகளில் தடை ஏற்படும். பொருள் விரயம், நஷ்டம் உருவாகலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆக.29க்கு பிறகு பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.
* மருத்துவர்களுக்கு ஆக.29க்கு பிறகு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* வக்கீல்கள் ஆக.29க்கு பிறகு புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது கவனம் தேவை.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம்
* பால்பண்ணை தொழிலில் ஆக.29க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
* மாணவர்கள் ஆக.29க்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம். அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
நல்ல நாள்: ஆக.17,18,23,24,25,26,27, செப்.1,2,3,4,5,9,10,13,14,15
கவன நாள்: ஆக.28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: பச்சை, வெள்ளை
பரிகாரம்:
* காலையில் நீராடி சூரிய வழிபாடு
* சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்
* செவ்வாயன்று முருகனுக்கு தீபம்