பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
திட்டமிட்டு செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!
புதன் ஆக.29ல் கன்னி ராசிக்கு செல்வதால் நற்பலன் கொடுப்பார். அதே போல் சுக்கிரன் தற்போது 3ம் இடத்தில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவர் ஆக. 31ல் கடக ராசிக்கு சென்றாலும் தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். அவர் செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சியை தந்து கொண்டு இருக்கிறார்.
ராகு ஆக. 31 வரை 3ம் இடமான மிதுன ராசியில் இருந்து நன்மை கொடுப்பார். அவர் செப்.1ல் 2-ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் பிரச்னையையும், திடீர் பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படலாம். கேது செப்.1ல் 8-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுவது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவரால் விபத்து, பயம், செயல்முடக்கம், உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
குடும்பத்தில் சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதனால் ஆக.29க்கு பிறகு எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பிரிந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களிடம் சுமூகநிலை ஏறபடும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும்.
பெண்கள் குரு,சுக்கிரனால் கூடுதல் பலனை காண்பர். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகத்துடன் பணியாற்றுவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஆக.29 வரை பொருள் இழப்பு ஏற்படலாம். கணவர் வகையில் தொல்லை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். ஆக.31க்கு பிற உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பொருளாதார வளம் பெருகும்.
* வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானத்தை பெறுவர். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆக.29 க்கு பிறகு வீடு திரும்புவர்.
* தரகு,கமிஷன் தொழில்செய்வோர் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் காண்பர்.
* அரசு பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஆக.29க்கு பிறகு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* ஐ.டி. துறையினருக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* மருத்துவர்களுக்கு ஆக.29 க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும்.
* வக்கீல்கள் ஆக.29க்கு பிறகு போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். விருது, பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு வருமானம் உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு மஞ்சள், கொண்டைக்கடலை, பயறு வகைகள், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். முதலீட்டை அதிகப்படுத்தாமல் இருப்பது நன்மை தரும்.
* பால்பண்ணை மூலம் அதிக வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனையும், அறிவுரையும் கிடைக்கும். ஆக.29க்கு பிறகு புதனால் நன்மை கிடைக்கப் பெறுவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆக.31 க்கு பிறகு மறைமுகப் போட்டியாளர்களால் பிரச்னை ஏற்படலாம்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலை பார்ப்பவர்கள் ஆக.31க்கு பிறகு சற்று கவனமாக இருப்பது அவசியம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அனைவரிடமும் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம்.
நல்ல நாள்: ஆக. 21,22,23,24,25,30,31 செப். 1,2,3,6,7,8,11,12
கவன நாள்: ஆக.26,27 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: மஞ்சள், வெள்ளை
வழிபாடு:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்விளக்கு
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு