Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கைகொண்ட சோழபுரத்தில் அரண்மனை ... ராஜகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ராஜகோபால சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி கொள்ளிட கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை
எழுத்தின் அளவு:
திருச்சி கொள்ளிட கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

பதிவு செய்த நாள்

30 ஏப்
2021
09:04

 திருச்சி:தமிழகத்திலேயே மிகவும் உயரமான, 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

சென்னை, நங்கநல்லுாரில் ஆஞ்சநேயருக்கு, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 32 அடி உயர சிலை உள்ளது. இது தான், தமிழகத்தில் மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலை, அடுத்ததாக, நாமக்கல்லில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன், கோவில் உள்ளது.

இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில், தமிழகத்தில் மிகவும் உயரமான, 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, கோவில் மற்றும் பீடம் அமைக்கப்பட்டு வருகிறது. மே மாதம் இறுதிக்குள் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக, ஆஞ்சநேயர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நிர்வாக அறங்காவலர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன், 65, தெரிவித்தார். இவர், ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில், 40 ஆண்டுகளாக, 2.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை வைத்து, வழிபாடு நடத்தி வருகிறார்.அவர் கூறியதாவது:மே மாத இறுதிக்குள் சிலை அமைக்கும் பணிகள் முடிந்துவிடும். இதற்காக, நாமக்கல் அருகில் ஒரே அளவு கல் வாங்கப்பட்டு, அதில் கலை நயத்துடன் சிலை வடிக்கும் பணிகள் முடிந்துள்ளன.சிலையை திருச்சி கொண்டு வரவேண்டியது தான் பாக்கி. திருச்சி மேலுாரில் கொள்ளிடம் கரையோரம் இடம் உள்ளது. அங்கு தான் கோவில் கட்டி, சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar