Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் வாசல்களில் திருமணம்; ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை திருவண்ணாமலையில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு கட்ட குழி தோண்டிய போது 9 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
வீடு கட்ட குழி தோண்டிய போது 9 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
05:06

பெரம்பலுார்: அரியலுார் அருகே, வீடு கட்ட குழி தோண்டியபோது 9 அடி உயரமும், மூன்றே முக்கால் அடி அகலமும் கொண்ட பெருமாள் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.

அரியலுார் மாவட்டம், கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,41, விவசாயியான இவர் வீடு கட்ட அஸ்திவாரம் அமைப்பதற்காக அவரது இடத்தில் குழி தோண்டினார். சுமார் ஆறு அடி ஆழத்திற்கு தோண்டியபோது, சிலை ஒன்று தலைகுப்புற வாக்கில் மண்ணில் புதைந்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பொக்லைன் மூலம் சுற்றிலும் குழி தோண்டப்பட்டு கற்சிலை வெளியே எடுக்கப்பட்டது. 9 அடி உயரமும், மூன்றே முக்கால் அடி அகலமும் கொண்ட பெருமாள் சுவாமி சிலையை மண்ணுக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது.

இந்த சிலைக்கு கரையான்குறிச்சி கிராம பொதுமக்கள் பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். தகவலறிந்த, வருவாய்த்துறை அலுவலர்கள் கரையான்குறிச்சி கிராமத்திற்கு வந்து கொண்டு செல்ல சிலையை எடுத்தனர். அப்போது, கிராம பொதுமக்கள் தாங்கள் வழிபாடு செய்வதால், சாமி சிலையை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமானுார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன் பின்னர் வழிபாடு செய்ய சிலை வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar