Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை: அக்., 5, 6ல் ... நவராத்திரி கொலுவுக்கு கொரோனா தேவி சிலை நவராத்திரி கொலுவுக்கு கொரோனா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேட்ட வரம் அனைத்தும் தரும் சிவகாசி பேச்சியம்மன்
எழுத்தின் அளவு:
கேட்ட வரம் அனைத்தும் தரும் சிவகாசி பேச்சியம்மன்

பதிவு செய்த நாள்

01 அக்
2021
10:10

சிவகாசி: பிள்ளை வரம் கிடைக்கவும், குழந்தைகளுக்கு பேச்சு வரம் கிடைக்கவும் சிவகாசி பேச்சியம்மனை வழிபட்டாலே இவை அனைத்தும் நடக்கிறது. சிவகாசி பி.கே.என்., ரோடு முருகன் காலனியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக அம்மன் தோன்றினார். அப்பகுதி மக்கள் வழிபட கேட்ட வரம் கிடைத்து வந்தது. தொடர்ந்து 1987ல் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு சிலை வைத்து வழிபட்டனர்.

இங்கு எங்கும் இல்லாத ரூபத்தில் பேச்சியம்மன் நாயகியாக காட்சியளிக்கிறார். கன்னியாகுமரி முதல் கைலாசம் வரை இந்தியாவில் இருக்கக்கூடிய சக்தி பீடங்கள், பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களின் பிம்பத்தை உள்ளடக்கிய ஒரே ஆலயமாக பேச்சியம்மன் கோயில் விளங்குகிறது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் பேச முடியாத, சிறுவயதிலிருந்தே திக்கி பேசும் குழந்தைகளுக்கு பேச்சு வரம் தருகிறார். தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்கு அம்மனை வேண்டினால் உடனடியாக வரம் கிடைக்கிறது. கோயிலுக்குள் நுழைந்தால் நம்மை அறியாத பரவசம் ஏற்படுகிறது.பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக லிங்கம், பஞ்ச முக ஆஞ்சநேயர், தன்வந்திரி, தத்தாத்ரேயர், விநாயகர் முதல் பைரவர் ஒரே இடத்தில் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு சுவாமியையும் வழிபட ஒவ்வொரு கோயிலாக செல்வதற்கு பதில் பேச்சியம்மன் ஆலயம் அந்த அனைத்து சுவாமிகளையும் ஒரே இடத்தில் வணங்கி அனைத்து பலன்களையும் பெறலாம்.நவராத்திரி விழாவின் பத்து நாட்களும் பேச்சியம்மன் பத்து விதமான அம்பிகை அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். மாசி மாதம் கடைசி வாரத்தில் அம்பிகைக்கு கொடியேற்றி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. அனைத்து தமிழ் மாத கடைசி செவ்வாயில் 108 விளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் மாதாந்திர வெள்ளி , சங்கடகரசதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷ பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை 6:00 - -11:00 மணி, மாலை 5:00 - -இரவு 9:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar