Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் தைப்பூச திருவிழா ... ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் : இரட்டை பிரபை  வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் : இரட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2023
08:01

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில், இந்தாண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவையொட்டி, நேற்று இரவு, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு புண்யாக வாசனம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், யாக வேள்வி, இறை அனுமதி பெறுதல் உள்ளிட்டவைகள் நடந்தது. அதன்பின், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். அதனைத்தொடர்ந்து, காலை, 7:23 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவல் உருவம் பொறிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட, 25 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்டிருந்த கொடி, கோவில் கொடிமரத்தில், கொடி மங்கள நாண்களால் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின்போது, பக்தர்கள், அரோகரா அரோகரா என, பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பினர். மாலை, அனந்தாசனத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுப்பிரமணிய சுவாமி, பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் நேற்று காட்சியளித்தார். சுற்றுவட்டார பகுதி பக்தர், ஏராளமானோர், பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனர். நேற்று, தைப்பூச திருவிழா துவக்கத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar