Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ... சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா துவக்கம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

03 மே
2023
09:05

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த நெருப்பெரிச்சல் ஜீ.என் கார்டனில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 25 ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவையொட்டி, நேற்று ‌காலை 6:00 மணி முதல், நெருப்பெரிச்சல் அங்காளம்மன் கோவிலில் இருந்து, நூற்றுகணக்கான பக்தர்கள் தீர்த்தம், பால்குடம் மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக‌ சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைப்பெற்றது. மாலை 4:00 மணிக்கு அலங்கார பூஜை, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு பட்டு படைக்கலம் அழைத்தல், 8:00 மணிக்கு கம்பம் சுற்றி ஆடுதல், 10:00 மணிக்கு அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று 3 ந் தேதி காலை 6:00 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, மாவிளக்கு மற்றும் அம்மனுக்கு சீழ்வரிசை எடுத்து ஊர்வலமாக செல்லுதல், 8:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு அம்மனுக்கு பொது பொங்கல் வைத்தல், 10:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை மற்றும் கிடா வெட்டுதல், மாலை 4:00 மணிக்கு சக்தி விநாயகர் கோவில் இருந்து பூவோடு ஊர்வலம், 6:00 மணிக்கு வீர மக்களின் காப்பு கழட்டுதல் தொடர்ந்து கம்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4 ந் தேதி காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 4:00 மணிக்கு அம்மன் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா வருதல். ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar