Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலப்பிடாவூரில் முத்தையா அய்யனார் ...  முத்தியால்பேட்டை  லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம் முத்தியால்பேட்டை லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம் ; செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்
எழுத்தின் அளவு:
 திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம் ; செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்

பதிவு செய்த நாள்

08 செப்
2024
03:09

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், திருப்புறம்பியத்தில், மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான, நால்வரால் பாடல் பெற்ற தலமான சாட்சிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தேனபிஷேக பெருமான் என அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பிரளயம் காத்த விநாயகர் நத்தைக் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல் பொருட்களால் உருவான மேனியைக் கொண்டவர். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும், இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில், மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு தேன் அபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர். தேன் அபிஷேகம் இன்று(8ம் தேதி) அதிகாலை சுமார் 5:00 மணி வரை விடிய விடிய நடந்தது. அபிஷேகத்தின்போது, விநாயகர் மீது ஊற்றப்படும் தேன் முழுவதும் அவரது திருமேனியின் உள்ளே உறிஞ்சப்பட்டு, சிலை சிறிது சிறிதாக தேன் நிறத்துக்கு மாறியது. தேன் அபிஷேகம் நிறைவடைந்தபோது, பிரளயம் காத்த விநாயகர் செம்பவள மேனியராக காட்சியளித்தார். இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar