Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலப்பிடாவூரில் முத்தையா அய்யனார் ...  முத்தியால்பேட்டை  லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம் முத்தியால்பேட்டை லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம் ; செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்
எழுத்தின் அளவு:
 திருப்புறம்பியத்தில் விடிய விடிய தேன் அபிஷேகம் ; செம்பவள மேனியராக காட்சியளித்த பிரளயம் காத்த விநாயகர்

பதிவு செய்த நாள்

08 செப்
2024
03:09

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், திருப்புறம்பியத்தில், மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான, நால்வரால் பாடல் பெற்ற தலமான சாட்சிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தேனபிஷேக பெருமான் என அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பிரளயம் காத்த விநாயகர் நத்தைக் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல் பொருட்களால் உருவான மேனியைக் கொண்டவர். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும், இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில், மட்டுமே தேன் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு தேன் அபிஷேகம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்துக்காக தேன் வழங்கினர். தேன் அபிஷேகம் இன்று(8ம் தேதி) அதிகாலை சுமார் 5:00 மணி வரை விடிய விடிய நடந்தது. அபிஷேகத்தின்போது, விநாயகர் மீது ஊற்றப்படும் தேன் முழுவதும் அவரது திருமேனியின் உள்ளே உறிஞ்சப்பட்டு, சிலை சிறிது சிறிதாக தேன் நிறத்துக்கு மாறியது. தேன் அபிஷேகம் நிறைவடைந்தபோது, பிரளயம் காத்த விநாயகர் செம்பவள மேனியராக காட்சியளித்தார். இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar