பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்; நீதிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதனால் குடும்பத்தில் நெருக்கடி இல்லாமல் போகும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். ராகுவினால் முயற்சி யாவும் வெற்றியாகும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் உங்களிடம் இருந்த பலவீனம், பயம் விலகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். சாதாரண முயற்சி கூட உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். விஐபிகள் ஆதரவு, உறவினர்கள் ஒத்துழைப்பு செயல்கள் லாபமாக்கும். இதுவரையில் இருந்த பாதிப்பு இப்பொழுது இல்லாமல் போகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்குரிய தகவல் வரும். மாதத்தின் பிற்பகுதியில் புத பகவான் உங்களுக்கு யோகத்தை வழங்கிட இருப்பதால் இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். விரும்பிய இடத்தை உங்களால் வாங்க முடியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள்.
சந்திராஷ்டமம்: செப். 29
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 19, 26, 28. அக். 1, 8, 10, 17.
பரிகாரம்: சூரியனை வழிபட்டுவர வாழ்வில் வளம் உண்டாகும்.
திருவோணம்: தெளிந்த மனதுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து வந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். ராகு, குரு, செவ்வாயின் செயல்பாடு உங்கள் உச்சத்தை தொட வைக்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு என்பது இருக்கும். அவையாவும் நிறைவேறும். ஒதுக்கி வைத்த வேலையெல்லாம் இப்பொழுது நடைபெறும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். தொழிலில் இருந்த போட்டி, பிரச்னை, மறைமுகத்தொல்லை குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழப்பார்கள். இழுபறியான வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் வாங்க முடியாமல் இருந்த இடத்தை வாங்கி அதில் குடி புகுவீர்கள். எடுக்கின்ற முயற்சி யாவும் வெற்றியாகும். முடங்கிக்கிடந்த தொழில் இப்பொழுது முன்னேற்றத்தை நோக்கி நகரும். அதனால் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். குழந்தைகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். காவல், இராணுவம், விவசாயம், மருத்துவம், கெமிக்கல் போன்ற துறைகளில் பணிபுரிந்து வருவோரின் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கமான நிலை ஏற்படும். உறவுகள் உங்களைத் தேடிவரும், தெய்வ அருளும், பெரியோரின் ஆசியும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 29, 30.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 20, 26. அக். 2, 8, 11, 17.
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் கூடும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்: நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம். இதுவரை நிறைவேறாமல் இருந்த முயற்சி இப்பொழுது நிறைவேற ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி, பிரச்னை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்குவரும். சமூகத்தில் மற்றவரால் மதிக்கக்கூடிய நிலை உண்டாகும். குரு பகவானின் பார்வையால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தெய்வ அருளும், பெரியவர்கள் துணையும் உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களுக்கு ஏற்பட்ட தடை விலகும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். ராகுவினால் நீங்கள் செயல்படும் வேலை ஒவ்வொன்றும் உங்களுக்கு லாபத்தை உண்டாக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைபடக்கூடிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். புத பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்போரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இனக்கமான நிலை ஏற்படும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். அக். 1
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.