Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முஸ்லிம் மன்னர் கட்டிய ஹிந்து ...
முதல் பக்கம் » துளிகள்
ஹனுமனை தரிசித்து தேங்காய் கொடுத்தால் நினைத்தது நிறைவேறும்..!
எழுத்தின் அளவு:
ஹனுமனை தரிசித்து தேங்காய் கொடுத்தால் நினைத்தது நிறைவேறும்..!

பதிவு செய்த நாள்

01 அக்
2024
12:10

ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். அங்கு இருந்து சீதையை மீட்டு வர ராமனுக்கு, பெரும் உதவியாக இருந்தவர் ஹனுமன். ராமன் கோவில் இருக்கும் இடங்களில் ஹனுமனும் இருப்பார். ஹனுமனுக்கு தனி கோவில்களும் உள்ளன. பெங்களூரு பனசங்கரி கடவந்திரா 1வது சதுக்கம் கிரிநகரில், காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 41 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தேங்காய் வாங்கிக் கொடுத்து, ஹனுமனை தரிசித்தால், தங்கள் மனதில் பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.


கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் தேங்காய் விற்பனை கடை உள்ளது. சிறப்பு தேங்காய் நுாறு ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். அந்த தேங்காயின் மீது முத்திரையிடப்பட்ட எண், உங்கள் பெயர் கொண்ட ரசீது வழங்கப்படும். அந்த தேங்காயை எடுத்துச் சென்று, ஹனுமன் முன்பு அமர்ந்து பக்தர்கள் மனதில் நினைப்பதை வேண்டிக் கொள்ள வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்பு, கோவிலின் வெளிப்புற பகுதியில் தேங்காய்களை துணியில் கட்டுவதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கு சென்று தேங்காயை கட்ட வேண்டும். பின், ஆரஞ்சு நிற கயிறு, கையில் கட்டுவதற்கு வழங்கப்படும். 16 நாட்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதினாறாவது நாள் கோவிலுக்கு சென்று, உங்களது தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த நடைமுறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கோவிலின் அர்ச்சகர்களிடம் கேட்கலாம். அவர்கள் பொறுமையாக விளக்கம் அளிப்பர். ஆஞ்சநேயரின் ஆசிர்வாதத்துடன் பக்தர்களின் எண்ணங்கள் நிறைவேறட்டும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். -– நமது நிருபர் – -

 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக கோவில்களை ஹிந்து மதத்தவர் கட்டுவது வழக்கம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவர் அற்புதமான ... மேலும்
 
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar