Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனமழை எதிரொலி; சத்திரம், புல்மேடு ... டிஜிட்டல் மயமாகிறது சபரிமலை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில்கள் டிஜிட்டல் மயமாகிறது சபரிமலை மற்றும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் முன்பதிவு நேரத்தை கடைபிடிக்காதவர்கள் காத்திருக்க வேண்டிவரும்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் முன்பதிவு நேரத்தை கடைபிடிக்காதவர்கள் காத்திருக்க வேண்டிவரும்!

பதிவு செய்த நாள்

03 டிச
2024
10:12

சபரிமலை; ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் வர வேண்டும், அல்லாத பட்சத்தில் வரும் நாட்களில் காத்திருக்க வேண்டிய நிலை வரும் என்று கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் கூறியுள்ளார்.


விருச்சுவல் கியூவில் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நாளிலும் குறிப்பிட்ட நேரத்திலும் வராமல் உள்ளனர். சிலர் முந்தைய நாளும் சிலர் அடுத்த நாளும் சிலர் இரண்டு நாட்கள் கழித்தும் கூப்பன்களை கொண்டு வருகின்றனர். இருமுடி கட்டு வருவதால் வேறு வழி இன்றி அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது தேவையற்ற நெரிசலையும், பக்தர்களின் சுமுகமான தரிசனத்தையும் பாதிக்கக்கூடும் என்பதால் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பத்தணம்திட்டா மாவட்ட போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.


நேற்று முன்தினம் சபரிமலையில் மழை பெய்த நிலையில் மதியம் 1:00 மணி வரை உள்ள பக்தர்களின் வருகை பரிசோதிக்கப்பட்டது. மொத்தம் 36 ஆயிரத்து 828 பேர் வந்ததில் 7 ஆயிரத்து 546 பேர் நாள் மற்றும் நேரம் மாறி வந்துள்ளனர் என தெரியவந்தது. நவ.,15 நடை திறந்த நாள் முதல் நேற்று முன்தினம் மதியம் வரை தரிசனம் நடத்திய பக்தர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 572. இதில் தாங்கள் பதிவு செய்த நேரத்திலும், நாளிலும் மாறி வந்தவர்கள் 2 லட்சத்தது 3 ஆயிரத்து 260 பேர். நாளும்,நேரமும் தவறிவரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போலீசாருக்கும், தேவசம்போர்டுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சபரிமலை போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரி ஏ.டி.ஜி.பி. எஸ். ஸ்ரீஜீத் கூறியதாவது: ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தாங்கள் தேர்வு செய்த நேரப்படி வரவேண்டும். வரும் நாட்களில் பதிவு செய்த நேரத்தில் வராத பட்சத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லா பக்தர்களுக்கும் தரிசனம் உறுதி செய்யப்படும் என்றாலும் முன் பதிவு நேரம் அடிப்படையிலேயே பக்தர்கள் பம்பையில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 
temple news
சபரிமலை: மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி, ... மேலும்
 
temple news
சபரிமலை; எருமேலியில் நேற்று நடைபெற்ற அம்பலப்புழா - ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலில் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு கேரள உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பல்வேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar