Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கனமழை; பக்தர்கள் வருகை ... சபரிமலையில் முன்பதிவு நேரத்தை கடைபிடிக்காதவர்கள் காத்திருக்க வேண்டிவரும்! சபரிமலையில் முன்பதிவு நேரத்தை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
கனமழை எதிரொலி; சத்திரம், புல்மேடு வனப்பாதையில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை
எழுத்தின் அளவு:
கனமழை எதிரொலி; சத்திரம், புல்மேடு வனப்பாதையில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை

பதிவு செய்த நாள்

02 டிச
2024
04:12

கூடலுார்; கன மழை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சத்திரம் புல்மேடு வனப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


புயல் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டிச.5 வரை தொடர்ந்து மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வண்டிப்பெரியாறிலிருந்து சத்திரம், முக்குழி, புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்லும் வனப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தடைவிதித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். கனமழையால் காட்டுப்பாதையில் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதாகவும், கடுமையான பனிமூட்டத்தால் பாதை தெரியாமல் திசை மாறி செல்லும் அபாயம் உள்ளதாகவும், வனவிலங்குகள் நடமாட்டத்தாலும் இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் வண்டிப்பெரியாறு, எருமேலி, பம்பை வழியாக கோயிலுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலையில் வனப்பாதையில் நடந்து செல்வதற்காக சத்திரம் வந்த பக்தர்கள் அனைவரையும் கேரள அரசு பஸ் மூலம் பம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar