Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரண கோஷம் முழங்க ... சபரிமலையில் 37 நாட்களில் 29 லட்சம் பேர் தரிசனம்;  கடந்த ஆண்டைவிட 4.50 லட்சம் அதிகம் சபரிமலையில் 37 நாட்களில் 29 லட்சம் பேர் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலைக்கு அலங்கரித்து வரும் வாகனங்களுக்கு அபராதம்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு அலங்கரித்து வரும் வாகனங்களுக்கு அபராதம்

பதிவு செய்த நாள்

23 டிச
2024
11:12

சபரிமலை; சபரிமலை வரும் வாகனங்களை உருவ மாற்றம் செய்து அலங்கரித்து வரக்கூடாது என கேரள மாநில மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர். அவ்வாறு வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.


சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பல்வேறு வகையில் அலங்கரித்து வருகின்றனர். வாழைக்குலை, இளநீர் போன்றவற்றை கட்டியும், வாகனத்தை பல்வேறு கோயில்களின் மாதிரியில் வடிவமைத்தும் வருகின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களை எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சபரிமலை பாதைகள் வளைவுகள் நிறைந்தன. பக்கவாட்டில் மிக ஆழமான பள்ளங்களும் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களால் பிற டிரைவர்களின் கவனம் திசை திரும்பினால் பெரிய விபத்து ஏற்படும் என கேரள மாநில வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கியை அமைத்து பாடல்களை ஒலிபரப்பி வருவது, கண்கவர் விளக்குகளால் அலங்கரித்து வருவது போன்றவை வனவிலங்குகளையும் பாதிக்கிறது. வாழைக்குலை, இளநீர் குலை போன்றவை வனவிலங்குகளை கவர்ந்திழுக்கும். எனவே இப்படிப்பட்ட செயலில் ஈடுபட வேண்டாம் என்று மோட்டார் வாகனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்தாலும் ஏராளமான வாகனங்கள் இவ்வாறு தொடர்ந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து உருவமாற்றம் செய்து வரும் வாகனங்களுக்கு ரூ.ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர்களுடைய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வாகனங்களில் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மோட்டார் வாகனத்துறை சபரிமலை பாதைகளில் தொடங்கியுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar