Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபத ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இராப்பத்து இரண்டாம் திருநாள்; நம்பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இராப்பத்து இரண்டாம் திருநாள்; நம்பெருமாள் புறப்பாடு

பதிவு செய்த நாள்

11 ஜன
2025
01:01

திருச்சி;  வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து இரண்டாம் திருநாளான இன்று பகல், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், டிச., 30ம் தேதி முதல் துவங்கிய வைகுண்ட ஏகாதசி விழாவில், டிச., 31ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் நம்பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து பல்வேறு அலங்காரங்களில் புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை, 5:15 மணியளவில் தனுர் லக்னத்தில், பரமபத வாசல் திறப்பு நடந்தது. மூல ஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர திருஆபரணங்கள் அணிந்து, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாக வந்தார். தொடர்ந்து, பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என, பக்தி கோஷமிட்டவாறு பரமபத வாசலை கடந்து சென்றனர். இரண்டாம் நாளை இன்று பகல், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். திருவாய்மொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் - வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து நீண்ட சௌரிக் கொண்டை சாற்றி: அதில்  கலிங்கத்துராய், சந்திர - சூர்ய வில்லை; சிகப்பு கல் நெற்றி சரம் ; கர்ண பத்திரம், வைர அபய ஹஸ்தம் ;  திரு மார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம், இரு புறமும் புஜ கீர்த்தி அதன் கீழ் மகரி, வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள், தங்க பூண் பவழ மாலை, காசு மாலை; மரகத பச்சை கிளி ஹாரம் அணிந்து பின்புறம் - சௌரியில் கோடாலி முடிச்சு போட்டு - அதில் வைர ரங்கூன் அடிக்கை சாற்றி, பங்குனி உத்திர பதக்கம் அணிந்து; இரு திருக்கைகளிலும் - வெள்ளை கல் அரசிலை பதக்கம் சாற்றி; இடுப்பில் கல் இழைத்த ஒட்டியாணம் சாற்றி ; கையில் தாயத்து சரங்கள், தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்தார்.


ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜன., 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் ஏகாதசி விழா நிறைவடைகிறது.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
திருச்சி:  திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருஅத்யயன வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது; 10ம் தேதி ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar