Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... ராவணாசூர வாகனத்தில் பள்ளிகொண்டீஸ்வரர் அருள்பாலிப்பு ராவணாசூர வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயிலில் மாசி மக கொடியேற்றம் ; மார்ச் 12ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
 காளாத்தீஸ்வரர் கோயிலில் மாசி மக கொடியேற்றம் ; மார்ச் 12ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

01 மார்
2025
07:03

 உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் மார்ச் 12 ல் நடைபெறுவதையொட்டி காலை கொடியேற்றம் நடைபெற்றது.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. இது ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலின் தேரோட்டம் , ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மக தேரோட்டமாக நடைபெறும். 2020 க்கு பின் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை.

வரும் மார்ச் 12 ல் தேரோட்டம் நடத்த ஹிந்து அறநிலைய துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. முன்னதாக வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனுமந்தன்பட்டி உத்தம நாச்சியம்மன் கோயில், உத்தமபாளையம் பிடாரி அம்மன் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை முதல் மார்ச் 11 வரை தினமும் காலை, மாலையில் அனைத்து சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். விதவிதமான அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருவார். மார்ச் 11 ல் திருக்கல்யாணமும், 12 ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பி.டி.ஆர்., விஜயராஜன், டி.எஸ்.பி. செங்கோட்டு வேலவன், செயல் அலுவலர் சுந்தரி, அட்வகேட் ராஜேந்திரன், கர்ணம் ரவி, தென் காளஹஸ்தி சேவா அறக்கட்டளை டிரஸ்டி முருகேசன், ஓம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் அய்யப்பன், செயலர் ரவி, உறுப்பினர்கள் அசோக் குமார், முருகன், மறவர் சங்க தலைவர் சுருளி, முன்னாள் கவுன்சிலர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar