Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி ... உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா; முறையான முன்னேற்பாடு செய்யாதால் பக்தர்கள் அவதி உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு மொபைல் துரித உணவு வேன்கள் நன்கொடை
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு மொபைல் துரித உணவு வேன்கள் நன்கொடை

பதிவு செய்த நாள்

04 ஏப்
2025
04:04

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானத்திற்கு இரண்டு மொபைல் துரித உணவு வேன்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இன்று வெள்ளிக்கிழமை, பெங்களூருவில் உள்ள M.S. ராமையா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த  M.S. சுந்தர் ராம் என்ற பக்தர், பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க ரூ.45 லட்சம் மதிப்புள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டு படா தோஸ்த் மொபைல் துரித உணவு வேன்களை திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார். முதலில், இந்த வாகனத்திற்கான சிறப்பு பூஜைகளை கோவிலில் அர்ச்சகர்கள் செய்தனர். பின்னர், வாகன சாவியை தேவஸ்தான கூடுதல் அலுவலர் வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைத்தனர்.


இத குறித்து தேவஸ்தான அலுவலர் கூறியதாவது; இந்த அதிநவீன வாகனங்கள் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பக்தர்கள் நெரிசல் ஏற்படும் போதும் வரிசையில் பிரசாதம் மற்றும் குடிநீரை விநியோகிக்க இவை பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனங்கள் மூலம் ஒரே நேரத்தில் 03 ஆயிரம் பேருக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க முடியும் என்று அவர் கூறினார். இன்று முதல் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்தது. நன்கொடையாளர்கள் இதுவரை இரண்டு வாகனங்களை நன்கொடையாக அளித்துள்ளதாகவும், மற்றொரு வாகனம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேவஸ்தான கூடுதல் அலுவலர் நன்கொடையாளர்களை வாழ்த்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar