பதிவு செய்த நாள்
09
மே
2025
02:05
உத்திரம்.. செல்வாக்கு உயரும்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, வாழ்வில் நன்மை உண்டாக்கப் போகிறார். செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப் போகிறார். வீடு, வாகனம், பட்டம், பதவி என வளமாக்கப் போகிறார். நீங்கள் இழந்தவற்றை மீண்டும் உங்களிடம் சேர்க்கப் போகிறார். இதுவரை இருந்த நெருக்கடிகளை போக்கி, தடைபட்ட வேலைகளை நடத்தித் தருவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும், உடல்நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சியை தருவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரித்து, தொழில் புரிவோருக்கு உழைப்பை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு பொறுப்பை உணர்த்துவார். வியாபாரிகளுக்கு அக்கறையை உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். இதன் காரணமாகத் தான் ‘பத்தாமிட குரு பதவியைப் பறிப்பார்’ என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். என்றாலும் நேர்மையானவர்களையும், உண்மையாக உழைப்பவர்களையும் குரு சோதனைக்கு ஆளாக்க மாட்டார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விடவும் பார்க்கும் இடங்களை சுபப்படுத்துவார் என்பது பொதுவிதி. 1ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 3,5,7 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு வழங்குவதால் வாழ்வில் இருந்த சங்கடங்கள், நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வேலையின் காரணமாகவோ, கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ பிரிந்த தம்பதி சேருவர். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 2,4,6 ம் இடங்களுக்கு மே11 முதல் குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் விலகி நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும். உடல் பாதிப்புகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். நோய் நொடி அகலும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும்.
சனி சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச்6 வரை 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் குழப்பம், நட்புகளிடம் பகை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் மிதுன குருவின் பார்வை 7ம் இடத்து சனிக்கு உண்டாவதால் பாதிப்புகள் குறையும். 2026 மார்ச் 6 முதல் சனி 8 ம் இடத்தில் அஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். நிம்மதியற்ற நிலை உருவாகும். கடன், அவமானம், விபத்து என்ற நெருக்கடியும் சிலருக்கு ஏற்படும். பணியில் நெருக்கடி அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை சத்ரு ஜெய ஸ்தான சனியால் செல்வாக்கு உயரும். நினைப்பது நடக்கும். எந்த ஒன்றிலும் எதிர்ப்பில்லாத நிலை உருவாகும். வழக்கில் வெற்றியுண்டாகும். மார்ச் 6 க்கு மேல் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை. கூட்டுத்தொழிலில் நெருக்கடி. நண்பருக்குள் பிரச்னை, தவறான நபர்களின் சேர்க்கையால் பண இழப்பு, அலைச்சல், அவமானம் ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு 7ல் ராகு, கேது ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால், குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம், ஆரோக்யம் என அனைத்திலும் நெருக்கடி ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 6ல் ராகு, 12ல் கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த குழப்பம், போராட்டம், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வழக்கு வெற்றியாகும்.
சூரிய சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, ஜன 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலை, மன நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு செப். 14 – அக். 27, ஜன. 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 10 – டிச. 6, பிப். 21 – ஏப். 1 காலங்களிலும் தன் 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தைரியத்தை அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். நேரம், காலத்தினால் அடங்கிக் கிடந்த உங்கள் நிலையை மாற்றுவார். உடல்நலத்தை மேம்படுத்துவார். நினைத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.
பொதுப்பலன்
குருபகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 2,3,4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன் உண்டாகும். ஆறாமிட ராகு நினைத்ததை நடத்தி வைப்பார். குருபார்வைகளும், சூரிய, செவ்வாய் சஞ்சாரங்களும் 4 பாதத்தினருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தொழில்
தொழில் மீது அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். முடங்கிய தொழில்களை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியும் இக்காலத்தில் வெற்றியாகும். பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, நிதிநிறுவனம், ஆட்டோ மொபைல்ஸ், ரெடிமேட்ஸ், ஜூவல்லரி, அழகு சாதனம், வாகன விற்பனை, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் துறையினர் முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி விலகும். உங்களின் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு இடத்திற்கு மாறுவர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
குருபகவானின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு மறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.
கல்வி
படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வெற்றி உண்டாகும். விரும்பும் கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
அதிகபட்ச உழைப்பாலும், அலட்சிய புத்தியாலும் உடல் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். பரம்பரை நோய், தொற்று நோய், நரம்புக் கோளாறு, சுவாசப் பிரச்னையால் சிரமப்படலாம். சிலர் விபத்தையும் சந்திக்க நேரிடலாம்.
குடும்பம்
குரு பகவானின் சஞ்சார நிலை, பார்வைகள் குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் வீடு, வாசல், வண்டி, வாகனம் என கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும்.
பரிகாரம்: அதிகாலையில் நீராடி சூரியனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம்.. நல்லதே நடக்கும்: மனக்காரகனான சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், வித்யா காரகனான புதனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். எந்த ஒன்றிலும் இரண்டு பக்கங்களையும் பார்க்கக் கூடியவர் என்பதால் உங்களால் எப்போதும் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்குரிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, விவேகம், வித்தை, அந்தஸ்தையும் வழங்கும் குரு மே 11 முதல், ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 10 ம் இடம் என்பது, உங்கள் ராசிநாதனின் ஆட்சி வீடு என்பதால் அவரது 10ம் இட சஞ்சாரம் பற்றி பயப்படத் தேவையில்லை. அதற்கும் மேலாக ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்தின் அதிபதி குரு என்பதால் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்க மாட்டார். 10 ம் இட குருவால் புதிய பதவி, தொழிலைக் கையில் எடுப்பீர்கள். தற்போது பார்த்து வரும் பணியை விட உயர்வான பணிக்கு மாற்றம் பெறுவீர்கள். தற்போதுள்ள இடத்தில்தான் மாற்றம் இருக்குமே தவிர அது உங்களுக்கு உயர்வானதாகவே இருக்கும்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களுக்கு குருப் பார்வை உண்டாகிறது. 2 ம் இடம் என்பது தன, குடும்ப, வாக்கு, நேத்திர ஸ்தானம் மட்டுமல்ல புகழை வெளிப்படுத்தும் இடமும் ஆகும். 4 ம் இடம் என்பது மாதுர் மற்றும் சுகம், வாகன ஸ்தானமாகும். 6 ம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். இந்த இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் சுபநிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு உயரும். மனதில் இருந்த சங்கடம் விலகும். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். மனதில் இருந்த குழப்பங்கள் மறையும். வாழ்வில் முன்னேற்றப் பாதை தெரியும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். புதையல் கிடைத்ததுபோல் திடீர் யோகம் உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். தீராத நோய்கள் தீரும். ஆரோக்யம் உண்டாகும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வம்பு வழக்குகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை சத்ரு ஜெய ஸ்தானமான 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் நினைத்ததை சாதிப்பீர்கள். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். நினைப்பது நடந்தேறும். எந்த ஒன்றிலும் எதிர்ப்பும், போட்டியும் இல்லாத நிலை உருவாகும். உடல் பாதிப்புகள் விலகும். இழுபறி வழக்குகள் வெற்றியாகும். மார்ச் 6 முதல் 7 ம் இடத்தில் கண்டச் சனியாக சஞ்சரிப்பதால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். பொதுவாகவே களத்திரக்காரகன் உங்கள் ராசியில் நீச்சமடைபவர் என்பதால் இக்காலத்தில் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாவதுடன் தவறான நட்பு ஏற்படும். அவர்களால் பண இழப்பு, அலைச்சல், அவமானம், நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
6ம் இட ராகுவால் உங்களின் நிலை உயரும். எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். முயற்சி வெற்றி பெறும். அரசியல், தொழில், வேலையில் இருந்த எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். 12ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். சிலர் இடம், நிலம், தங்கம் வாங்குவர். கல்வி, வேலை, தொழில் என சிலர் சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்வர்.
சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 – ஆக. 16, நவ. 17 – டிச. 15, பிப். 13 – மார்ச் 14 காலங்களில் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், வேலையில் செல்வாக்கை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சிகளில் வெற்றி அளிப்பார். அரசியல்வாதிகளின் கனவை நனவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் இருந்த சங்கடத்தை போக்குவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்
அக்.10 – டிச. 6, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும் தன் 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். புதிய நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் மேம்படும். வழக்கு சாதகமாகும்.
பொதுப்பலன்
10 ம் இட குருவின் பார்வைகளும், 6 ம் இட சனி, ராகு சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும். அக்.8 முதல் நவ.8 வரை 11ம் இடமான கடகத்தில் உச்சமடையும் காலத்தில் யோகப் பலன் அதிகரிக்கும். சூரிய, செவ்வாய் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
தொழில்
தொழில் ஸ்தானத்தில் குரு, 6ம் இட ராகு, சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில்மீது அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். போட்டிகள் விலகும்.
புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். கல்வி, நிதிநிறுவனம், நோட்டுப் புத்தகம் தயாரிப்பு, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஒப்பந்தம், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, குடிநீர், வேளாண்மை, ஜூவல்லரி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், திரைப்படம், சின்னத்திரை, வலைதளம் தொழில்கள் முன்னேற்றமடையும்.
பணியாளர்கள்
அரசு பணியாளர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பர். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள்.
பெண்கள்
சுக ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பலம் பெறுவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும்.
கல்வி
வித்யாகாரகன் வீட்டில் ஞானகாரகன் சஞ்சரிப்பதுடன் 2, 4 ம் இடங்களும் சுபம் பெறுவதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பும் கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை
சுக ஸ்தானம் சுபிட்சம் பெறுவதாலும், ருண, ரோக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் ஆரோக்யம் மேம்படும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். நீண்ட நாளாக தொடர்ந்த மருத்துவச் செலவு குறையும்.
குடும்பம்
குடும்ப ஸ்தானம் சுபிட்சம் பெறுவதால் நெருக்கடி, பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வண்டி, வாகனம் என்ற கனவு நனவாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.
பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை.. விருப்பம் நிறைவேறும்: ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து, தொழிலிலும், வியாபாரத்திலும் அக்கறையை அதிகரிப்பார். பணியில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். முயற்சிக்கேற்ற ஆதாயம் அளிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரித்து, உங்கள் கனவுகளை நனவாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கையுடன், வீடு, மனை, வாகனம் என வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். சிலருக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். பணி, தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எடுக்கும் வேலைகளை லாபமாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை வழங்குவார். தொழில், வியாபாரத்தின் காரணமாக இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலையை சிலருக்கு உண்டாக்குவார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 2,4,6 ம் இடங்களுக்கு வழங்குவதால், குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் பல வழிகளில் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும். நோய்கள் தீரும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். 3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நெருக்கடிகள் இல்லாமல் போகும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வழக்கில் இருந்த சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைஞர்களுக்கு காதல் தோன்றும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.
சனி சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், செல்வாக்கு உயரும். நோய் விலகும். எதிர்ப்புகள் மறையும். நினைத்ததை சாதிக்கவும், எடுத்த வேலைகளை முடிக்கவும் முடியும். மார்ச் 6 முதல் 7ம் இடத்தில் கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் தவறானவர்களின் நட்பு ஏற்படும். வாழ்க்கை தடுமாறும். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடியும், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடும் தோன்றும். 3,4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தான சனியால், குடும்பத்தில் பிரச்னைகளும் போராட்டமுமாக இருக்கும். பிள்ளைகளால் நெருக்கடி, அவமானம் உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உயர் கல்வி முயற்சியில் தடைகளும், வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். மார்ச் 6 முதல் உங்களுக்கிருந்த நெருக்கடி இல்லாமல் போகும். உடல் நிலை, மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை சாதிக்கக்கூடிய நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
ராகு, கேது சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு ராகு 6 ல், கேது 12 ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி, அவமானம், போராட்டம் விலகும். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறுபக்கம் அதற்கேற்ற வருமானம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். 3,4ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னைகளும், உறவினருக்குள் பகையும், சொத்து விவகாரத்தில் சண்டை சச்சரவுகளும், பிள்ளைகளால் அவமானமும் ஏற்படும். அதே நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தேவை பூர்த்தியாகும்.
சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை நிறைவேற்றி வைப்பார். வேலைக்காக எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு, அக்.10 – டிச.6, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 29, டிச.6 – ஜன.14, ஏப்.1 – மே26 காலங்களிலும் 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிரி தொல்லை விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும்.
பொதுப்பலன்
குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். 1,2 ம் பாதத்தினருக்கு
10ம் இட குருவின் பார்வைகளும், 6ம் இட சனி, ராகு சஞ்சாரமும், அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தான குருவும், லாப கேதுவும், யோகப் பலன்களை வழங்குவர். 4ம் பாதத்தினருக்கும் சூரிய, செவ்வாய் சஞ்சாரங்கள் செல்வாக்கை உயர்த்தும். முன்னேற்றத்தை உண்டாக்கும்.
தொழில்
1,2 ம் பாதத்தினருக்கு 10ல் குரு, 6ல் ராகு, சனி, 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலர் தொழிலை வெளியூரிலும் விரிவு செய்வர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தரும். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த பொருட்கள், மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், மருந்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கல்வி நிறுவனம், நிதிநிறுவனம், ஸ்டேஷனரி, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன்ஸ், சின்னத்திரை, வலைதளம் தொழில்கள் நல்ல லாபம் தரும்.
பணியாளர்கள்
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வும், ஊதியமும் கிடைக்கும்.
பெண்கள்
இக்காலம் மிகவும் யோக காலமாகும். படிப்பு, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
கல்வி
குரு பகவானின் சஞ்சாரத்தால் படிப்பில் இருந்த தடைகள் விலகும். வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள். படிப்பின் மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
உடலில் பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய்களும் தொற்று நோய்களும் இயற்கை வைத்தியத்தால் குணமாகும்.
குடும்பம்
குடும்பத்தில் நெருக்கடி விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். எதிர்கால தேவைக்காக சேமிப்பை உண்டாக்குவீர்கள்.
பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.