Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சன்கோவிலில் மகோற்சவ விழா ... சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு வர்ண ஜப பூஜை! சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு வர்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி கோயிலில் ரூ.2 லட்சம் உண்டியல் வசூல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2012
11:12

கடையநல்லூர்: பண்பொழி திருமலைக் கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியல் வசூல் 2லட்சத்து 37ஆயிரத்து 553 ரூபாய் கிடைத்துள்ளது. இந்த உண்டியல் வசூல் அறநிலையத்துறை, நிர்வாகத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் பண்பொழி திருமலைக் கோயிலில் சுமார் 5கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மலைப்பாதைகளில் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்கு வசதிகள் ரூ. 37 லட்சம் செலவில் அமைத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்பொழி திருமலைக்கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், கோயில் தக்கார் கண்ணதாசன் மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் ஏற்பாட்டின்படி தற்போது தங்கத் தேர் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் அறநிலையத்துறை நிர்வாக ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. தொடர்ந்து சுமார் ரூ. 10லட்சம் செலவில் கோயில் வளாகத்தில் புனரமைப்பு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையில் மலைப்பாதை அமைக்கப்பட்டதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் கோயிலுக்கு அதிகளவில் வருகிறது. கோயிலில் 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் உண்டியல் காணிக்கை பணம் உதவி ஆணையர் கண்ணதாசன், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதன் மூலம் 2 லட்சத்து 37ஆயிரத்து 553 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோயிலுக்கு உண்டியல் மூலமாக கிடைக்கும் காணிக்கை வசூல் அதிகரித்து வருவதால் அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar