Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சன்கோவிலில் மகோற்சவ விழா ... சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு வர்ண ஜப பூஜை! சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு வர்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி கோயிலில் ரூ.2 லட்சம் உண்டியல் வசூல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2012
11:12

கடையநல்லூர்: பண்பொழி திருமலைக் கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியல் வசூல் 2லட்சத்து 37ஆயிரத்து 553 ரூபாய் கிடைத்துள்ளது. இந்த உண்டியல் வசூல் அறநிலையத்துறை, நிர்வாகத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் பண்பொழி திருமலைக் கோயிலில் சுமார் 5கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மலைப்பாதைகளில் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்கு வசதிகள் ரூ. 37 லட்சம் செலவில் அமைத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்பொழி திருமலைக்கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், கோயில் தக்கார் கண்ணதாசன் மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் ஏற்பாட்டின்படி தற்போது தங்கத் தேர் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் அறநிலையத்துறை நிர்வாக ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. தொடர்ந்து சுமார் ரூ. 10லட்சம் செலவில் கோயில் வளாகத்தில் புனரமைப்பு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையில் மலைப்பாதை அமைக்கப்பட்டதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் கோயிலுக்கு அதிகளவில் வருகிறது. கோயிலில் 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் உண்டியல் காணிக்கை பணம் உதவி ஆணையர் கண்ணதாசன், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதன் மூலம் 2 லட்சத்து 37ஆயிரத்து 553 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோயிலுக்கு உண்டியல் மூலமாக கிடைக்கும் காணிக்கை வசூல் அதிகரித்து வருவதால் அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar