* பசுவை வணங்கு. பிரம்மா, விஷ்ணு, சிவனை வழிபட்டதற்கு சமம். * பசுவை ஒரு முறை சுற்று. உலகத்தை சுற்றுவதற்கு சமம். * பசுவுக்கு புல், பழம், அகத்திக்கீரை கொடு. பாவம் தீரும். * பசுவை பார்ப்பதும், அதன் ஓசையைக் கேட்பதும் நல்ல சகுனம். * பசு இருக்கும் இடத்தில் கடவுளின் பெயரைச் சொன்னால் அதிக பலன் கிடைக்கும். * பசு இருக்கும் இடத்தை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருக்கும். * பசுக்கள் வீடு திரும்பும் மாலை நேரம் ‘கோதுாளி லக்னம்’. இந்த நேரத்தில் பசுவின் குளம்படியில் இருந்து கிளம்பும் புழுதி, நம் உடலில் பட்டால் புண்ணியம் சேரும்.