Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றில் இறங்கும் அழகரை காண வி.ஐ.பி., ... பங்குனி உத்திர திருவிழா பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரநல்லூர் காத்யாயனி தேவிக்கு சுவர்ண கஜம் சமர்ப்பிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
10:04

குமாரநல்லூர்: கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், குமாரநல்லூரில் உள்ள தேவி கோவிலில், காத்யாயனி அம்மனுக்கு, "சுவர்ண கஜம் அர்ப்பணிக்கப்பட்டது.108 தலங்களில் ஒன்றுவரலாற்றுப் புகழ் பெற்றதும். 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, குமாரநல்லூர் காத்யாயனி தேவி கோவில், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, 108 துர்கை அம்மன் திருத்தலங்களில் ஒன்று.இந்தக் கோவிலின் அருகாமையில் உள்ள கிராமத்தில் வசித்த இரு பிரிவினரிடையே, 300 ஆண்டுகளுக்கு முன், திடீரென பகை ஏற்பட்டது. அந்த காலத்தில், பெண்கள் சொல்வதை, ஆண்கள் கேட்காத நிலை ஏற்பட்டது.

இப்பிரச்னையை தீர்க்க, காத்யாயனி அம்மனால் மட்டுமே முடியும் என, அவ்வூர் பெண்கள் நம்பினர். அம்மன் மீது, பஜனைப் பாடல்களை பாடினர். இதற்கு, நல்ல பலனும் கிடைத்தது.இதையடுத்து, கோவில் நிர்வாகிகள், அம்மனை ஊர்வலமாக அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதாவது, பிரச்னை எங்கு தொடங்கியதோ அந்த இடத்தை நோக்கி, காத்யாயனி அம்மனை, யானை மீது அமர வைத்து, ஊர்வலமாக அழைத்து செல்ல முடிவு செய்தனர். இந்த விழா, மீனம் மாதத்தில், பூரம் நட்சத்திரம் அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த ஊர்வலம், கோவிலின் கிழக்கு வாயிலில் நுழைந்தவுடன், பிரச்னைக்கு காரணமான இரண்டு பிரிவு தலைவர்கள், தங்களுக்கு இடையிலான சண்டை, முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, இந்த ஊர்வலம், கோவில் நுழைவாயிலில் நுழைந்தது. இதில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தங்களின் கைகளில், திருவிளக்கை ஏந்தி வந்தனர். மோதலால், கிராமத்தினர் இழந்த மகிழ்ச்சி, அமைதி ஆகியவை, அன்றைய தினம், திரும்பவும் அவர்களுக்கு கிடைத்தது.பிள்ளையாருக்கு பதில்...ஒவ்வொரு ஆண்டும், இதற்கான திருவிழா, குமாரநல்லூரில் நடக்கிறது. உயிருள்ள யானைக்கு பதிலாக, தங்கத்தால் ஆன, பிள்ளையார் முகத்தை, தேவிக்கு சமர்ப்பித்த வருவதை, சம்ப்ரதாயமாகக் கொண்டிருந்த கிராமத்தினர், இவ்வாண்டு, ஒரு அடி உயரமுள்ள தங்கயானையைச் செய்துள்ளனர்.கடந்த மார்ச் 26ம் தேதி நடைபெற்ற பூரம் திருவிழாவில், அம்மனுக்கு தங்க யானை சமர்ப்பிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar