Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உள்ளம் குளிருதய்யா... உன்னை ... சித்திரைக்காக காத்திருக்கும் வெற்றிலை! சித்திரைக்காக காத்திருக்கும் ...
முதல் பக்கம் » மதுரை சித்திரைப்பெருவிழா!
ஆபரணங்களும் வெட்கப்படுகிறதே!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
12:04

அழகுப் பெண்களின் அங்கம் தங்கமாய் ஜொலித்தாலும், அதில் ஆபரணம் சேர்த்து அழகு பார்ப்பது, பொன்விளக்கிற்கு பொட்டிட்டு பார்ப்பதைப் போல மெருகேறும். தங்கமோ, வைரமோ, குண்டுமணி பாசி மாலையோ, அதன் வடிவமைப்புதான் கண்களை கவரும். மதுரை மீனாட்சி அம்மனும் பெண் தானே! அன்னையின்  முகவசீகரத்தில் அவருக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் கூட வெட்கப்படுவது அழகோ... அழகு.  அம்மன், சுவாமிக்கென பாண்டிய மன்னர்கள் காலம் தொட்டு பலர் வழங்கிய பவளம், முத்து, வைரம் பதித்த ஏராளமான நகைகள், கிரீடங்கள், பதக்க மாலைகள் இருந்தாலும், திருக்கல்யாணத்திற்கென பிரத்யேக ஆபரணங்கள் அணிவிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளன.  திருக்கல்யாணத்தன்று, மணமகன் சுந்தரேஸ்வரருக்கு பவளங்கள் பதித்த கல்யாண கிரீடமும், அம்மனுக்கு ராயர் கிரீடமும் அணிவிக்கின்றனர். ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கியது தான், ராயர் கிரீடம். இதனாலேயே பட்டாபிஷேகத்தின் போதும் இந்த கிரீடம் அம்மனை அலங்கரிக்கிறது.  உள்ளங்கை அளவு வட்டமான நீல நாயக பதக்கம்,  மதிப்பிட முடியாத பதக்கம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுதவிர, பச்சைக்கல் தங்க பதக்கம்,  நளப்பதக்கம் என சித்திரை திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் அம்மனையும், சுவாமியையும் விதவிதமான  ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. எந்த திருவிழாவிற்கு எந்த ஆபரணம், கிரீடம் என, அலங்கார பட்டர்கள்  ஆலோசித்து, சூட்டுகிறார்கள்.  திருக்கல்யாணத்தன்று மட்டும் அம்மனுக்கு  பிட்டத்தகடு அணிவிக்கப்படுகிறது. அதாவது அம்மனின் பின்பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள். இதுமட்டு மல்லாமல், பொட்டுக்காரைத் தாலி, கல் இழைத்த  தாலி, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சித்தர் பதக்கம், அம்மனுக்கு தங்க சடை சிங்காரம் என ஆபரணங்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. கல்யாணத்திற்கு வருவோரை வரவேற்க, சந்தன  கும்பா, பன்னீர் சொம்பு, நெய் ஊற்றி வேள்வி வளர்க்க தங்க தேக்கரண்டி என எல்லாமே தங்கத்தில் இருப்பது திருக்கல்யாணத்தின் சிறப்பு. சரி, மொத்த ஆபரணங்களின் மதிப்பு இன்றைய மார்க்கெட் விலையில் எவ்வளவு  இருக்கும்? ............ ரூபாய் (கணக்கிட முடியலையா... நாங்களும் இப்படித் தான் யோசிச்சிட்டே இருக்கோம்)

 
மேலும் மதுரை சித்திரைப்பெருவிழா! »
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று, (ஏப்.,24ல்)  தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆடுவோம்.... பாடுவோம்... கொண்டாடுவோம்..: மதுரை மக்களின் மண்வாசனை மாறாத மரபுகள் தான், சித்திரை திருவிழாவை பிற ... மேலும்
 
temple news
கல்யாணம் என்றால் விருந்து இல்லாமலா...மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar