எல்லாருக்கும் நல்லதைச் செய்யும் எண்ணமுள்ள மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் ஆட்சி பலத்துடன் ராசியில் இடம்பெற்று சிரம பலன்களைத் தருகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், கேது செயல்படுகின்றனர். குடும்ப செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு பேசுவது நல்லது. பூர்வசொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் தமது தேவைகளை உங்களிடம் இதமாக பேசி நிறைவேற்றிக் கொள்வர். உடல்நலக்குறைவு ஏற்படலாம். கவனம் தேவை.எதிரிகளிடமிருந்து விலகுவது நல்லது. கடன்கள் நிர்ப்பந்தம் செய்யும். இதைச் சரிசெய்ய சிலர் வேறு நபர்களிடம், அதிக வட்டிக்கு கடன்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தம்பதியர் குடும்ப சூழ்நிலையின் சிரமம் உணர்ந்து சரிசெய்யும் எண்ணத்துடன் ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். நண்பர்களிடம் சிரம சூழ்நிலைகளை பற்றி அதிகம் சொல்வதால் பயன் எதுவும் இல்லை.தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப்பெற அதிக முயற்சியும் வெளியூர் பயணமும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் அளவான லாபம் வைத்து பொருட்களை விற்பதால் விற்பனையின் அளவு சீராகும். பணியாளர்கள் கவனக் குறைவால் பணியில் குளறுபடியை எதிர்கொள்வர். நிர்வாகத்தின் கண்டிப்பினால் சலுகைகள் பெறுவதில் தாமதம் உருவாகும். கவனம்.குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு சிரமப்படுவர். கணவருடன் அனுசரித்து நடந்து குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் அதிக கவனத்துடன் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை வருவதை தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் பொருட்களை ரொக்கத்திற்கு விற்பதால் கடன் சுமை வராது. புதிதாக முதலீடு செய்ய வேண்டாம்.அரசியல்வாதிகள் பயணங்களால் உடல் சோர்வும் தேவையற்ற செலவும் எதிர்கொள்வர். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் கிடைக்கும். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைத்துக்கொள்வதால் உடல்நலமும் மன அமைதியும் சீராகும்.
உஷார் நாள்: 28.5.13 இரவு 10.17-30.5.13 இரவு 12.30. வெற்றி நாள்: மே 17, 18, 19 நிறம்: சிவப்பு, நீலம் எண்: 1, 8
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »