கருணை மழை பொழியும் காஞ்சிபுரம் காமாட்சியின் கோயில் அருகிலேயே, ஆதி பீடா பரமேஸ்வரி குடி கொண்டுள்ளார். மிகப் பழைய இக்கோயில், மிகப் புராதானமான வட இந்தியக் கோயில்களை நினைவூட்டுகின்றன. இங்கிருக்கும் சக்திலிங்கம் (லிங்கத்தில் அம்மனின் உருவம்) வேறு எங்குமே இல்லாதது. மற்றொரு லிங்கம் காசியில் இருந்து, கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. சக்தி லிங்கத்தைத் தொழுதால், கணவன் - மனைவி அன்னியோன்னியம் சர்வ நிச்சயம்..
அதே போல மஹா காளன் எனும் நாகத்தால் தொழப்பட்ட மஹா காளேஸ்வரர் பக்கத்திலேயே, ராகு கேது பூஜித்த தலம். கருவறையில் இரு கைகளிலும் ராகு கேதுவை பிடித்தபடி சிவன்! வேறு எங்கும் இல்லாத சிலா ரூபம்! இதை விட ராகு கேது பரிகார ஸ்தலம் வேறு எதுவாக இருக்க முடியும்?