காசியில் பாதி கல்பாத்தி என புகழப்படுவது கல்பாத்தி தலம். கேரள மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ள இவ்வூரில், காசியைப் போன்றே காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களும் கார்த்திகை முதல் நாளும் நடைபெறும் தேர்த்திருவிழா பிரசித்தம். தமிழக சிற்பிகளால் 100 ஆண்டுகளுக்குமுன் செய்துகொடுக்கப்பட்ட திருத்தேரை இங்கு காணலாம். கல்பாத்தியைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை வலம் வந்து கார்த்திகை முதல் நாளன்று தேர் நிலைக்கு வரும்.