Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குசேலர் பகுதி-3 குசேலர் பகுதி-5 குசேலர் பகுதி-5
முதல் பக்கம் » குசேலர்
குசேலர் பகுதி-4
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2011
04:03

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் அரசனானான். குசேலருக்கு ஏழ்மை இருந்தாலும் அதுபற்றி அவர் கண்டுகொண்டதே இல்லை. மேலும் சுசீலை என்ற மனைவி வாய்த்தாள். அவள் சிறந்த குணவதி.குசேலர் விதிப்படி வாழ்க்கையை நடத்துபவர். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி, சந்தியாவந்தனம் முடித்து, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி தியானம் செய்பவர். குசேலரைப் பற்றி இந்த இடத்தில் சிறப்புச் செய்தி ஒன்றை சொல்லலாம். யார் ஒருவர் குசேலரின் நெறிமிக்க வாழ்க்கையை புகழ்ந்து பேசுகிறாரோ, அதை கடைபிடிக்கிறாரோ அவர் பிறப்பற்ற நிலையை அடைவார் என்பது யாரும் அறியாத ஒரு செய்தி. தெய்வங்களை வணங்குவதால் மட்டுமே பிறப்பற்ற நிலை கிடைக்கும் என்பார்கள். ஆனால் குசேலரின் வாழ்க்கை முறையை பின்பற்றுவோருக்கும் இத்தகைய நிலை கிடைக்கிறது என்றால் இந்த தொடரைப் படிக்கும் அனைத்து வாசகர்களும் கொடுத்து வைத்தவர்கள் ஆகின்றனர்.குசேலருக்கு பொறாமை என்பதே கிடையாது. அருகில் வசிப்பவர்கள் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. குசேலரைவிட அங்கிருந்த அனைவரும் வசதிமிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் குசேலரின் குடும்பம் மட்டும் ஏழ்மையில் தவித்தது. அவரது மனைவி சுசீலைக்கு ஏராளமான குழந்தைச் செல்வங்களைப் பெற வேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை நிறைவேறும் வகையில் அவளுக்கு ஏராளமான குழந்தைகள் பிறந்தார்கள். (சுசீலைக்கு 27 குழந்தைகள் பிறந்ததாக ஒரு தகவல் உண்டு.)குசேலர் மிகச்சிறந்த கிருஷ்ணபக்தர். எல்லோரும் கடவுளை நண்பனாக ஏற்றுக்கொள்வர். ஆனால் குசேலருக்கு நண்பனே கடவுளாக அமைந்தான். இது மாபெரும் பாக்கியமாகும். திருமாலின் பாதங்களை திருமகள் வருட, ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் கோலத்தை எந்நேரமும் அவர் மனதில் நினைத்திருப்பார்.

காலையில் எழுந்ததும், ஹரிஹரி! ஹரிஹரி! என மந்திரம் சொல்வார். வெளியில் கிளம்பும்போது கேசவா! கேசவா என்பார். மதியம் உணவு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் கோவிந்தா என முழங்குவார். இரவில் மாதவா! மாதவா என சொல்லாமல் அவர் துயில் கொண்டதில்லை. (இந்த மந்திரங்களை அனைவருமே அந்தந்த நேரத்தில் ஏழுமுறை சொல்லலாம்).ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்மணி இருக்கிறாள். குசேலருக்கு ஏற்ற மனைவியாக சுசீலை வாய்த்தாள். கணவனது உடலை பாதுகாக்க வல்லவள் மனைவி என்று அறிஞர்கள் சொல்வார்கள். இந்த வாக்கியத்திற்கு சொந்தக்காரியாக சுசீலை திகழ்ந்தாள். அவள் அன்பு மிக்கவள். இனிய குணம் படைத்தவள். நற்குடியில் பிறந்தவள். தங்கள் இல்லத்துக்கு வருகின்ற விருந்தினர்களை வறுமையான சூழலிலும் உபசரிப்பதில் மகிழ்ச்சி அடைபவள். கோபம் என்பதே அவளுக்கு வந்ததில்லை. கற்பு நிலையை உடையவள். இருப்பதைக் கொண்டு வாழ்வதில் திருப்தி அடைபவள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறந்ததால், ஊரார் தவறாக பேச ஆரம்பித்தனர்.இந்த குசேலனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கிறதா? இவனது வீட்டில் தரித்திர லட்சுமி தாண்டவமாடுகிறாள். ஆனால் இவனோ ஏராளமான குழந்தைகளை பெற்றுக்கொண்டிருக்கிறான். இவர்களை எப்படி காப்பாற்றப் போகிறான்? இவனது மனைவியின் உடல்நிலைதான் என்ன ஆகும்? அதுபற்றி கொஞ்சமாவது கவலைப்பட்டானா? அவனது இச்சைதானே முக்கியமாக இருக்கிறது? என்றெல்லாம் கூறினார்கள்.ஆனால் குசேலருக்கு இல்லற வாழ்வில் நாட்டம் கிடையாது. கிருஷ்ண பக்தியைத்தவிர அவர் ஏதும் அறியாதவர். அதேநேரம் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மத்தை அறிந்தவர். சுசீலைக்கு ஏராளமான குழந்தைச் செல்வத்தை பெறவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசையையே அவர் கிருஷ்ண உணர்வுடன் பூர்த்தி செய்து வைத்தார்.

அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதுண்டு.சுசீலா! நீ ஏராளமான குழந்தைகள் பெறவேண்டும் என்கிறாய். உன் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை. இதையெல்லாம் என்ன தைரியத்தில் செய்கிறாய்? என்றார்.அதற்கு அவள் அழகாக பதில் சொன்னாள்.நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பர் கிருஷ்ணனைப் பற்றி சொல்வீர்கள். அவரையே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கிருஷ்ண உணர்வு எனக்குள்ளும் இருக்கிறது. நமக்கு பிறந்த குழந்தைகளுக்கும் கிருஷ்ண உணர்வு மட்டுமே இருக்கிறது. ஒருநாள் கூட நமது குழந்தைகள் அம்மா பசிக்கிறது என்று சொன்னதில்லை. எப்படிப்பட்ட பசியையும் அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். உங்களுக்குள் ஒரு தனி ஆற்றல் இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? என கேட்டு நிறுத்தினாள்.குசேலர் கேள்விக்குறியுடன் அவள் முகத்தை பார்த்தார்.என்ன சொல்கிறாய் சுசீலா? என்றார்.நீங்கள் பூஜை, புனஸ்காரம் என்று கோயில்கள் பக்கம் செல்வதில்லை. யாராவது சுபநிகழ்ச்சிகளை நடத்திவைக்க அழைத்தால் அதற்கும் செல்வதில்லை. உங்களைத் தேடிவந்து நமது இல்லத்திலேயே அமர்ந்து யார் ஒருவர் சடங்குகளை நடத்தி வைக்கச் சொல்கிறாரோ அவருக்கு மட்டுமே பணி செய்கிறீர்கள். அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் நமது குடும்பம் நடந்துகொண்டிருக்கிறது. நம் இல்லத்தில் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலைமை தினமும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் பசி பொறுக்காமல் சில நேரம் ஏங்கத்தான் செய்கிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள் கிருஷ்ணனின் கதைகளை அவர்களிடம் சொல்கிறீர்கள். அதைக்கேட்டவுடன் வயிறும் மனமும் நிறைந்து அவர்கள் உறங்கி விடுகிறார்கள். ஆக, நமது இல்லத்துக்கு தேவை சோறும் கறியும் அல்ல; கிருஷ்ண உணர்வு மட்டுமே; அது இங்கே நிறைந்திருக்கிறது. இது மட்டும் கடைசிவரை நம் வீட்டில் இருந்தால் போதும். மற்றவர்களின் விமர்சனங்களை நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. அவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென அந்த கிருஷ்ணனிடம் வேண்டிக் கொள்வோம், என பணிவுடன் தெரிவித்தாள்.தன் பத்தினியின் அருள்வாக்கு கேட்டு குசேலர் மகிழ்ந்து போனார்.

 
மேலும் குசேலர் »
temple news

குசேலர் பகுதி-1 மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-2 மார்ச் 28,2011

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-3 மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-5 மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-6 மார்ச் 28,2011

சுசீலா கேள்! பிரம்மன் ஒருவனுக்கு எந்தளவுக்கு ஆயுளை எழுதி வைக்கிறான் என்பதை அறிவுடைய அனைவரும் அறிவர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar