Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குசேலர் பகுதி-1 குசேலர் பகுதி-3 குசேலர் பகுதி-3
முதல் பக்கம் » குசேலர்
குசேலர் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2011
04:03

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், புலி, கரடி, மான் ஆகிய எல்லா மிருகங்களும் உண்டு. வேடர்கள் கூட இந்த மலையிலுள்ள காட்டிற்குள் செல்ல அஞ்சுவார்கள். அந்த மலையின் உச்சியில் வேதம் படித்த பிராமணர்கள் வாழ்ந்த குடியிருப்பு ஒன்று இருந்தது. அங்கே, எந்நேரமும் வேத முழக்கம் கேட்கும். அந்த முழக்கம், கடலில் இருந்து எழுகின்ற அலைகளின் ஒலியை விட சப்தமாக இருக்கும். அந்த குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் வசித்தவர் சுதாமா. அவரை குசேலர் என்றும் அழைப்பார்கள்.சுகப்பிரம்ம  முனிவர், பரீட்சித்து மன்னனுக்கு கிருஷ்ண லீலைகளை வரிசையாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் இல்லையா? கிருஷ்ணனின் பல லீலைகளை அவர் சொல்லியபோது மிக அருமையாக, தைரியமாக சொல்லிக் கொண்டிருந்தார். குசேலர் என்ற பெயரைச் சொன்னதுமே அவரது நாதழுதழுத்தது. அவர் கிளி முக கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.பரீட்சித்து, இந்த குசேலனை சாதாரணமானவன் என நினையாதே. அவன் பரம பாகவதன், பகவானின் பக்தன். அவன் வீட்டுத் திண்ணையில் கந்தல் ஆடையுடன் அமர்ந்து, கிருஷ்ணா கிருஷ்ணா, கோவிந்தா கோபாலா, மதுசூதனா, பத்மநாபா என்று அவனது திவ்யநாமங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பான். அவன் எதைப்பற்றியுமே கவலைப்பட்டதில்லை. நிஷ்கவலை என்பார்களே! அதற்குச் சொந்தக்காரன் அவன். நம் நிலைமை இப்படியிருக்கிறதே! பக்கத்து ஆத்தில் உள்ளவர்கள் எல்லாம் வசதியும் வாய்ப்பும் பெற்று திறம்பட வாழ்கிறார்களே! பிராமணனுக்கு அனுமதிக்கப்பட்ட உஞ்சவிருத்தியையாவது (யாசித்து பொருள் பெறுதல் மேற்கொள்வோமே! எதுவுமே செய்யமாட்டான் குசேலன்.

மனைவி, மக்கள் இருக்கிறார்களே! அவர்களைப் பற்றி ஏதாவது அவன் கவலைப் பட்டிருக்க வேண்டுமே! ஊஹூம்... அவன் எண்ணமெல்லாம் கண்ணன்,  அந்த மன்னாதி மன்னனின் சிந்தனையைத் தவிர வேறெதுவுமே அவனது நினைவில் இல்லை, என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டார்.  பகவான் கோபியரிடம் இப்படி நடந்து கொண்டான், வெண்ணெய் திருடினான், கம்சனைக் கொன்றான்... என்று எத்தனையோ லீலைகளைச் சொன்னவருக்கு, குசேலரின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அழுகை வர வேண்டுமானால், அந்த பக்தர் மீது சுகப்பிரம்மரே எவ்வளவு தூரம் மரியாதை வைத்திருந்தார் என்பதை எண்ணும் போது, நம் உடல் சிலிர்க்கிறது. நமது கண்களிலும் கண்ணீர் முட்டுகிறது. அத்தகைய திவ்யமானவரின் வரலாறைப் படிக்க அந்த பகவான் நமக்கு கொடுப்பினையைத் தந்துள்ளானே! இதை விட நமக்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்! குசேலரின் குணநலன் அளப்பரியது. அடக்கம், இரக்கம், பொறுமை, நட்பு, பொறாமையின்மை ஆகியவை அவருடன் பிறந்தவை. கோபம் அவரை எட்டியே பார்த்ததில்லை. கோபக்காரர்களைக் கண்டால் வெறுத்து ஒதுங்கியும் செல்பவர். விருப்பங்களை அவர் துறந்தவர். கண்ணனைத் தவிர எந்த விருப்பமும் அவருக்கு கிடையாது. தனது வாழ்க்கைப் பயணத்துக்கு கிருஷ்ணனின் திருநாமம் மட்டுமே போதும் என நினைத்தவர். மயக்கம் இல்லாதவர் அவர்...என்ன மயக்கம்? இந்த உலகத்தில் இருக்கும் போலியான இன்பங்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத தன்மை. மொத்தத்தில் அவர் தூயவர்க்கெல்லாம் தூயவர். இளம் வயதில், அவர் சாந்தீபனி முனிவரின் குருகுலத்துக்கு வேதம் கற்கச்  சென்றார். அங்கே, கிருஷ்ணரைச் சந்தித்தார். கிருஷ்ணரும், சுதாமா என்ற குசேலரும் ஒரே பெஞ்ச் என்று சொல்லுமளவு அடுத்தடுத்து அமர்ந்திருப்பர். இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வேதங்கள் ஓதி ஓதி நாம் எம்பெருமானை அழைத்துப் பார்க்கிறோம். முனிவர்களெல்லாம் ஏராளமான யாகங்களை நடத்தி அவிர்பாகத்தை வழங்க அவனை அழைத்துப் பார்க்கிறார்கள். அவன் வர மறுக்கிறான்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் பாற்கடல் வாசலில் நின்று கோவிந்த நாம சங்கீர்த்தனம் பாடுகிறார்கள். அவன் காட்சி தர யோசிக்கிறான்.ஆனால், இதோ, ஒரு ஏழைச் சிறுவனின் அருகில் கோகுலத்துக் குழந்தையாய் அவன் வீற்றிருக்கிறான். இப்படியும் ஒரு கொடுப்பினை! அதே குருகுலத்தில் எத்தனையோ பிள்ளைகள் கிருஷ்ணனின் வகுப்பில் தான் இருக்கிறார்கள் என்றாலும், அடுத்தடுத்து அமர்வது என்பது இன்னும் நெருக்கத்தைக் கொடுப்பது என்பது தானே!நம் கிருஷ்ணனின் முன்னால் சாந்தீபனியே தூசு தான்! ஆனாலும், அவரைக் குருவாக அவன் ஏன் ஏற்றான் என்றால், மானிடப்பிறப்பின் நியாயம் கருதியே! மானிடனாய் பிறந்தவனுக்கு ஒரு குரு வேண்டுமே என்பதற்காக, வேதத்திற்கே தலைவனான அவன், வேதங்களாலேயே அறிய முடியாத அந்த நாயகன் சாந்தீபனி முனிவரிடம் வேதம் கற்க வந்திருந்தான். அவனோடு, அமரும் பாக்கியம் சுதாமாவுக்கு கிடைத்திருக்கிறது! அவர்கள் வகுப்பில் மட்டுமல்ல, சாப்பிடுவதும் சேர்ந்துதான்! விளையாடுவதும் சேர்ந்துதான்! படுப்பதும் சேர்ந்துதான்! காலையில் எழுவதும் சேர்ந்துதான்! பக்தன், பகவான் முகத்தில் விழிக்க ஆசைப்படுகிறான்! பகவான் பக்தன் முகத்தில் விழிக்க ஆசைப்படுகிறான்! அதிலும், அவன் எப்படிப்பட்ட பக்தன்! அவனுடைய பெயர் சுதாமா என்றாலும், பட்டப்பெயர் குசேலன்.குசேலன் என்றால் என்ன பொருள்? கிழிந்த ஆடைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து தைத்த ஆடையை நல்ல உடையாகக் கருதி ஏற்றுக்கொண்ட எளியவன்.நாம் கோயிலுக்குப் போகும் போது, நல்ல பட்டாக உடுத்திக் கொண்டு வாயேன்டி என்று மனையாட்டியை வற்புறுத்துகிறோம். அவள்  கணவனை கல்யாணத்துக்குப் பிறகு இந்த பட்டு வேட்டியைக் கட்டவே இல்லையே, இன்றாவது உடுத்திக் கொண்டு வரக்கூடாதா? என அன்புக் கட்டளையிடு கிறாள்.கோயிலிலும் அவர்களைத் தான் அர்ச்சகர் முன்நின்று வரவேற்கிறார். ஆனால், பொது தரிசனத்தில் வியர்வை வழிய எட்டி எட்டி பார்க்கிறானே! அவனைத் தான் பகவானுக்குப் பிடிக்கும்.குசேலன் கிழிந்த ஆடையுடன் குருகுலம் வந்தான். கண்ணனுடன் படிக்கும் பாக்கியம் பெற்றான். கண்ணனும் அந்த கிழிந்த ஆடை அணிந்தவனை நண்பனாக ஏற்றான்.

 
மேலும் குசேலர் »
temple news

குசேலர் பகுதி-1 மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-3 மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-4 மார்ச் 28,2011

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-5 மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-6 மார்ச் 28,2011

சுசீலா கேள்! பிரம்மன் ஒருவனுக்கு எந்தளவுக்கு ஆயுளை எழுதி வைக்கிறான் என்பதை அறிவுடைய அனைவரும் அறிவர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar