Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லப விநாயகர் கோவில் ... குசுமகிரி முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா! குசுமகிரி முருகன் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவப் பெருமாள் கோவில் முன் பாலம்: விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 நவ
2014
12:11

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திடீரென கோவில் முன்  மாநகராட்சி சிறு பாலம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலத்தை விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் டிச., 1ல் நடக்கிறது. 27ம் தேதி முளைப்பாரி  ஊர்வலம், 28ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. யாகசாலை அமைக்கும் பணி, அன்னதான பந்தல், முன்பகுதியில் கூரை  மற்றும் அலங்கரிக்கும் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பெருமாள் கோவில் வீதியின் குறுக்கே மழை நீர் வடிகால்  மீது எட்டு லட்சம் ரூபாய் செலவில் சிறு பாலம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, அந்த ரோடு அடைக்கப்பட்டு, குழி தோண்டப் பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு சாரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  திடீரென பாலம் கட்டுமான பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு  லட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், வழக்கம் போல் பாலம் கட்டும் பணியை தாமதப்படுத்தாமல், விரைந்து முடிக்க அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி கமிஷனர் கண்ணனிடம் கேட்ட போது, மழை நீர்  வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் வெளியேறி வருகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பாலம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுக்கப் பட்டது. அதையடுத்து, எட்டு லட்சம் ரூபாய் செலவில் கல்வெட்டு பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது; தாமதம் இல்லாமல் பணி மேற்கொள்ளப் படும்; அதிகபட்சம் 15 நாட்களுக்குள் பாலம் தயாராகி விடும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar