திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தரைத்தளம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2014 05:12
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 44வது ஷேத்திரமாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பகல் பத்து, ராப்பத்து உற்சவ காலங்களில், மூலவரான பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்நிலையில் சொர்க்கவாசல் எனும் ராப்பத்து மண்டபத்தின் குறிப்பிட்ட இடத்தில் உள்ள தரைத்தளத்தில் கொடிகள், புற்கள் முளைத்தும், மண் மேவி, புழுதியாக உள்ளதால் விஷேச நேரங்களில் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு அமர முடியாமல் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.
பரமக்குடி ஸ்ரீனிவாசன் கூறியதாவது: கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘தினமலர்’ நாளிதழில் தரைத்தளம் அமைத்திட கோரி செய்திவெளியானது. இன்று வரை இதற்கு தீர்வுகாணப்படவில்லை. வருகிற ஜன.,1 அன்று வைகுண்ட ஏகாதசி, பகல், ராப்பத்து <உற்சவ விழா ஜன.,10 வரை நடைபெறஉள்ளது. அதற்குள்ளாக தேவஸ்தானம், இந்துசமய அறநிலையத்துறைத்துறையினர் இதன்மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்துதரவேண்டும் என்றார்.